இளவயதில் முடி நரைக்க நிறையக் காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது பரம்பரை. அடுத்தது, சத்துக்குறைவு. இரும்புச் சத்தும் புரதச்சத்தும் உணவில் குறைந்தால் இளநரை ஏற்படும்.
தூக்கமின்மை, மன உளைச்சல், ரத்தச் சோகை, தைராய்டு இயக்குநீர் அதீதச் சுரப்பு, பிட்யூட்டரிச் சுரப்பிக் குறைபாடுகள், அடிசன் நோய் ஆகியவற்றாலும் இளநரை ஏற்படலாம்.
அடிக்கடி நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைச் சாப்பிடுவதும், அடிக்கடி எக்ஸ்ரே எடுப்பதும் இளநரைக்கு வழி வகுக்கும். பல வேதிப்பொருள்கள் கலந்த எண்ணெயைப் பயன்படுத்தினாலும் இளநரை தோன்றலாம்.
மன உளைச்சலைத் தவிர்ப்பதும், ஊட்டச் சத்துணவில் கவனம் செலுத்துவதும் இளநரையைத் தவிர்க்க உதவும் வழிகளாகும்.