தினேஷ் ரக்ஷிதா சின்னத்திரை நடிகர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்ற செய்தி சின்னத்திரையினர் மட்டும் அல்லாமல் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் தான் ரக்ஷிதா. சரவணன் மீனாட்சி தொடரில் தனது குறும்புத்தனமான நடிப்பில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ரக்சிதா பெங்களூரை சேர்ந்தவர்.
பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் பெரிய பிரபலத்தை அடைந்தார். அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி தற்பொழுது பிரிந்து வாழ்வதாகவும் இருவரும் விவாகரத்து பெற்று விட்டதாகவும் செய்திகள் நாளுக்கு நாள் வெளிவர தொடங்கியது.
இது பற்றி ரக்ஷிதாவின் கணவர் தினேஷ் அவர்களிடம் பிரபல நாளிதழ் கேட்டதற்கு வீட்டுக்கு வீடு வாசப்படி என்ன சொல்லுவாங்க அதேதான் எங்களுடைய வாழ்க்கையில் நடந்திருக்கு. இந்த சூழ்நிலையை எப்படி கையாளனும் தெரியும் கணவன் மனைவி இடையான சண்டை நடந்தால் சிலர் ஒரே வீட்டில் இருந்துட்டு ஒருத்தர் பேசாம இருப்பாங்க சில கொஞ்ச நாள் தனிமையாக இருக்கணும்னு முடிவு எடுப்பாங்க என்ன பொறுத்த வரை எங்களுக்கான பிரிவு தற்காலிகமானது தான்.
நானும் ரக்ஷிதாவும் இதுவரை சட்டபூர்வமாக எந்த ஒரு முடிவும் செய்யவில்லை என்று கூறி வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்தார்.
ரட்சிதா தினேஷ் இருவரும் சேர நிறைய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளிவந்து உள்ளது.