திவ்யா சின்னத்திரை ரசிகர்களால் ஒரு நேரத்தில் கொண்டாடப்பட்ட தொகுப்பாளினி திவ்யாவிற்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் ஒரு நேரத்தில் இருந்தார்கள்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை முதலில் தொகுத்து வழங்கி பெரிய பிரபலத்தை அடைந்தவர் தான் திவ்யா. நல்ல பாடகியும் கூட தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
தளபதி விஜயின் வில்லு விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை போன்ற படங்களில் பாடியும் உள்ளார்.
சென்னையை ரொம்ப நேசித்து வந்த திவ்யா திருமணத்திற்கு பின்பும் சென்னையில் இருக்க ஆசைப்பட்டார் ஆனால் தனது கணவருடைய வேலை வெளிநாட்டில் என்பதால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக திவ்யாவும் வெளிநாட்டிற்கு செல்ல ஒப்புக்கொண்டார்.
தற்பொழுது வெளிநாட்டில் வசித்து வரும் திவ்யா நான் எப்போது வேண்டுமானாலும் சென்னைக்கு வருவேன் வந்து எனது பணியை தொடருவேன் என்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் சப்போர்ட்டிவாக உள்ளார்கள் என்று கூறியுள்ளார்.
தற்பொழுது தனது கணவருடன் வெளிநாடுகளை சுற்றி வரும் திவ்யா அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு தனது ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளார்.
இதையும் படிங்க : எனக்கு ரகசிய மனைவியாக இரு மாதம் 25 லட்சம் தருகிறேன் பிரபல நடிகையிடம் பேரம் பேசிய தொழிலதிபர்..!!!
திவ்யதர்ஷினி மாகாபா பிரியங்கா போல பிரபலமான தொகுப்பாளிகளில் VJ திவ்யாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.