நீத்து சந்திரா ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகைக்கு தமிழில் யாவரும் நலம் என்ற மாதவனின் படத்தின் மூலம் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. யாவரும் நலம் மாபெரும் வெற்றியை பெற்றது அந்த படத்தில் ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நீத்து.
மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் வந்தது ஹிந்திப் படங்களில் பிஸியாக வலம் வந்த நடிகை தமிழில் விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார். அதன்பின் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் மிஷ்கினின் யுத்தம் செய் படத்தில் கன்னித்தீவு பெண்ணா என்ற பாடலுக்கு நடனம் ஆடி அசத்தி இருந்தார்.
ஒரு நேரத்தில் நீத்து வற்கு படவாய்ப்புகள் குவிந்தது காலம் அப்படியே மாறும் என்பது வழக்கமான ஒன்று தானே வெற்றிப்படங்களில் நடித்து பல பட வாய்ப்புகளைப் பெற்று நீத்து சந்திரா தற்பொழுது சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றுக்கு பேட்டியளித்த நீத்து சந்திரா என்னுடைய வாழ்க்கை வெற்றிகரமான நடிகையின் தோல்விகளை கொண்டது. 2005 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான நான் தேசிய விருது வாங்கிய பின் ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்தேன் ஆனால் இன்றைக்கு எனக்கு வேலை இல்லை ஒரு பெரிய தொழிலதிபர் ஒருவர் என்னிடம் மாதம் 25 லட்ச ரூபாய் தருகிறேன் எனக்கு ரகசிய சம்பள மனைவியாக இருக்க முடியுமா என்று என்னிடமே கேட்டார். அந்த தொழிலதிபர் அப்படி கேட்டதும் நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.
முன்னணி இயக்குனர் ஒருவர் என்னை ஒத்திகையை பார்க்க அழைத்திருந்தார் ஒத்திகை பார்த்த பின் ஒரு மணி நேரத்தில் என்னை நிராகரித்து விட்டார் என்று வருத்தத்துடன் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர் ஹாலிவுட்டில் நான் இரண்டு படங்கள் நடித்திருக்கிறேன் யாருடைய துணையும் இல்லாமல் நான் ஹாலிவுட்டுக்கு சென்றது சிலரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை அவர்களால் நம்ப முடியவில்லை சில வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு இருந்தது அந்த அளவு மனம் நொந்து இருந்தேன் என்று கூறியிருந்தார்.
நடிகையை மாதம் 25 லட்சம் தருகிறேன் எனக்கு மனைவியாக இரு என்று கேட்ட அந்த தொழிலதிபர் யார் என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.