நீலிமா ராணி தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து வந்த அவர். தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
1992ல் சினிமாவிற்கு அறிமுகமான நீலிமா 1995ல் சின்னத்திரை சீரியல்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். மெட்டிஒலி, கோலங்கள் போன்ற ஹிட் சீரியலில் நடித்து வந்த நீலிமா சமீபத்தில் மௌனராகம், மகாபாரதம், வாணி ராணி, தலையணை பூக்கள், அரண்மனை கிளி, திருமணம் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் வெள்ளித்திரையிலும் சின்ன திரையிலும் பிரபலமான நீலிமாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். நீலிமா ராணி வயதில் 12 வயது குறைவான இசை வாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
நீலிமா ராணிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள் சமீபத்தில் தான் மீண்டும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்
நீலிமாவை நாலு லட்சத்து 38 ஆயிரம் பேர் இன்ஸ்ட்டாவில் பின் தொடர்கிறார்கள் அடிக்கடி ஏதாவது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் நீலிமா சில நாட்களுக்கு முன் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு தொடர்ந்து பதில் அளித்து வந்தார்.
சமூக வலைதளங்களில் நடிகைகளிடம் கேள்வி கேட்கிறேன் என்று அத்துமீறி கேள்விகளை முன் வைத்து வருவது வழக்கமாகவே உள்ளது. நீலிமாவிடம் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதில் கூறி வர ரசிகர் ஒருவர் உங்களின் உள்ளாடை சைஸ் என்ன என்று கேட்டார் அதற்கு டென்ஷனான நீலிமா ராணி நான் ஏன் உனக்கு இதை சொல்ல வேண்டும் நீ எனக்கு விற்கப் போகிறாயா என்று பதிலடி கொடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து மற்றொரு ரசிகர் கொச்சையான சில கேள்விகளை கேட்டார் அதற்கு சற்று டென்ஷனான நீலிமா இந்த முட்டாளுக்கு நான் எப்படி பதில் சொல்வேன் என்று பதிலடி கொடுத்திருந்தார்.
சமூக வலைத்தளம் தானே என்ன வேணாலும் கேட்கலாம் என்று கண்டபடி கேள்வி கேட்கும் சிலர் நடிகைகளும் மனிதர்கள் தானே அவர்களுக்கும் மனம் உண்டு என்று சற்று சிந்திப்பதே இல்லை.