சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தற்பொழுது டாப் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன், மிமிக்ரி கலைஞராக சின்ன துறையில் தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஆங்கர், நடன நிகழ்ச்சியில் பங்கேற்பது என திறமையை எல்லா மூலையிலும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்ததன் பலனாக, தனுஷ் ப்ரொடக்க்ஷனில் சிவகார்த்திகேயனுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிவகார்த்திகேயனுக்கு காமெடி ரோல் தான் கிடைக்கும் என்று பார்த்த நிலையில் முழுக்க முழுக்க அவருக்கு ஹீரோ கதாபாத்திரமே அமைந்தது.
இவரது எதார்த்தமான நடிப்பு அனைவரையும் கவர்ந்ததால் தமிழில் முன்னணியின் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் என்று சொல்லும் அளவிற்கு இவர் படங்கள் மாஸ் காட்டி வருகின்றன. நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர், டான் என தொடர்ந்து மூன்று படங்கள் வெற்றி கொடுத்த நிலையில், அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இல்லாததால் படம் படுத்து தோல்வி அடைந்தது.
இதனால் பட வாய்ப்புகள் சற்று குறைய ஆரம்பித்துள்ளது, பிரின்ஸ் படம் தோல்வி அடைந்ததன் காரணமாக இந்தப் படத்திற்காக சிவா வாங்கிய சம்பளத்தை திரும்ப தருமாறு தயாரிப்பு நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது . இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டாலும் , இப்படி ஒரு சம்பவம் நடந்தது சிவாவை மிகவும் சோகமடைய செய்துள்ளது. என்னதான் கோலிவுட்டில் டாப் ஹீரோ நிலைமைக்கு வந்தாலும் எல்லா சினிமா நடிகர் வாழ்க்கையிலும் படம் வெற்றி, தோல்வி என்பது ரசிகைகளை சார்ந்தே உள்ளது. தனது அடுத்த படத்திலாவது ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் சிவா கதையை தேர்ந்தெடுப்பார் என்று அவர் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.