சமந்தா தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த நடிகை. சமந்தாவிற்கு தமிழைப் போல தெலுங்குவிலும் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அழகான நடிகை நன்றாக நடிக்க கூடிய நடிகை தற்போது சினிமாவை விட்டு சற்று விலகி இருப்பது ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை கொடுத்தது காரணம் myositis என்ற நோய்.
கோடிகளில் மருத்துவம் செய்து வரும் சமந்தா:
நோயின் தாக்கத்தால் உடைந்து போயிருக்கும் சமந்தா பல கோடிகளைக் கொட்டி வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார். சமந்தா விஜய் தேவரகொண்டா நடித்து செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் தான் குஷி.
பார்க்க பரிதாபமாக இருந்த சமந்தா:
இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் வெளியாகிறது சமீபத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தது. உடல்நிலை சரியில்லாத சமந்தா குஷி படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருந்தார்.
அவரை விஜய் தேவரகொண்டா அழைத்து வரும்போது அவருடைய முகம் வாடி போய் எதையோ யோசித்துக் கொண்டிருப்பது போல இருந்தது. பார்க்கவே பரிதாபமாக இருந்தது எப்படி இருந்த நடிகைக்கு இப்படி ஒரு நோய் ஏன் வந்தது என்று ரசிகர்கள் வருந்தும் அளவிற்கு சமந்தாவின் முகம் மாறி போயிருந்தது.
திடீர் என்று உடையை மாற்றிய சமந்தா:
சமந்தாவும் சற்று கவர்ச்சியான உடை அணிந்து வந்து குஷி படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா உடன் நடனமாடி விட்டு தனது உடையை மாற்றிக்கொண்டு மேடைக்கு அருகே உள்ள தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். சமந்தாவிற்கு கண்ணில் அதிக ஒளி பட்டால் தலைவலி வந்துவிடும் அதனால் உடனே உடையை மாற்றிக்கொண்டு கண்ணில் ஒரு கூலர் ஒன்றை அணிந்து கொண்டு வந்திருந்தார் சமந்தா.
சமந்தாவின் முகத்தை பார்க்கும் போது எதையோ பறிகொடுத்தது போல அமர்ந்திருந்தார் யாராவது அவரிடம் வந்து பேசினால் முகத்தை சிரித்தபடி வைத்துக் கொண்டு பேசினார்.
சமந்தாவிற்கு உடல்நிலை சரி இல்லை விஜய் – தேவரகொண்டா
குஷி படத்தில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் தேவரகொண்டா சமந்தா அவர்கள் உடல்நிலை இன்று சரியாக இல்லை ஒளியை அவர் கண்ணால் பார்த்தாலே அவருக்கு தலைவலி வந்துவிடும் என்பது எனக்குத் தெரியும். இன்று அழகாக உடை அணிந்து வந்து சிரித்துக் கொண்டு சமந்தா நடனம் ஆடியது ரசிகர்கள் உங்களுக்காக தான் கண்டிப்பாக செப்டம்பர் 1ஆம் தேதி சமந்தாவின் முகத்தில் சந்தோஷம் இருக்கும் என்று விஜய் கூறினார்.
ரசிகர்களுக்கு ஆறுதல் கூறிய சமந்தா:
அதனை தொடர்ந்து பேசிய சமந்தா உங்களுடைய அன்புக்கு நன்றி உங்களைப் பார்ப்பதற்காக தான் நான் வந்தேன். என்னுடைய கடினமான நேரத்தில் எனக்கு துணை நிற்கும் ரசிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நன்றி விரைவில் நான் குணம் அடைந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுப்பேன் என்று உருக்கமான குரலில் சமந்தா பேசியது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த சமந்தாவின் தற்போதைய நிலை பார்த்து ரசிகர்கள் உருகி வருகின்றனர். சிலர் கண்டிப்பாக நீங்கள் மீண்டு வருவீங்க சமந்தா என்று ஆறுதலும் கூறியுள்ளனர்.