தமிழில் வித்தியாசமான இயக்குனர்களில் பிரபு சாலமன் அவர்களும் ஒருவர் நெய்வேலியை சார்ந்த இவர் . காடுகள், மலைகள், அருவிகள், யானைகள் அனைத்தும் இவருடைய படங்களில் இருக்கும்.
பிரபு சாலமன் முதல் முதலாக மைனா படம் உருவான போது முதலில் அந்தப் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டது பிரபல நடிகை அனன்யா. அவருக்கு மிகக் குறைந்த சம்பளம் பேசி அட்வான்ஸ் தொகையாக 50000 வழங்கப்பட்டது.
பிரபு சாலமன் தமிழில் ஆர்ட் டைரக்டர் வீரசமர் ஹீரோவாக நடித்த வீரசேகரன் என்ற படத்தில் நடித்த மலையாள நடிகை அமலாபால் போட்டோவை பார்த்து உள்ளார்.
அமலாபாலின் கண்கள் கண்களைப் பார்த்து வியந்து போன இவர் அமலாபால் தான் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் பிரபு சாலமன் உடனே மைனா படத்தின் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அமலா பாலுக்கு கிடைத்ததாம்.
தனக்குக் கிடைத்த வாய்ப்பு பறிபோன விரத்தியில் அனன்யா வாங்கிய 50,000அட்வான்ஸ் தொகையை கூட படக்குழுவினரிடம் இதுவரை திருப்பிக் கொடுக்கவில்லை என்று தகவல்.
ஈர்க்கும் கண்களால் அமலா பாலுக்கு மைனா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அமலா கெட்டிக்காரர் தான்.