ரோஜா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து தெலுங்கு சினிமாவிலும் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்ட ரோஜா நடிகையாக மட்டும் தனது பயணத்தை முடித்துக் கொள்ளாமல் அரசியலில் இறங்கி சாதனையும் கண்டுள்ளார்.
அரசியலில் ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு முன்னேறி தற்பொழுது ஆந்திராவின் சுற்றுலா துறை அமைச்சராக தற்பொழுது பதவியில் இருந்து வருகிறார்.
விளையாட்டுப் போட்டிகளை துவங்கி வைத்து விளையாட்டு வீரர்களோடு கபடி விளையாடுவது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அனைவரையும் உற்சாகம் படுத்துவது என்று ஆந்திராவில் பெரிய செல்வாக்கில் உள்ளார் ரோஜா.
ரோஜா அவர்கள் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் செல்வமணி என்பவரை 2002 ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா WEB DEVELOPER ஆக இருந்து வந்த நிலையில் சிறந்த எழுத்தாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளார் “தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்” என்ற புத்தகம் G TOWN என்ற இதழில் வெளியானது.
அந்தப் புத்தகத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதை ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா பெற்றுள்ளார்.
இளம் வயதிலேயே சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதை பெற்ற ரோஜாவின் மகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த விருதை பாலிவுட் பிரபலம் நடிகை சஜன் வழங்கி உள்ளார்.