சினிமா ரிவ்யூ யூடியூபரில் மிகவும் பிரபலமானவர் தான் பிரசாந்த். மக்கள் புதிதாக திரைப்படம் வெளியானால் படம் நன்றாக இருக்கிறதா படத்தில் குறைகள் என்ன என்றெல்லாம் தெரிந்து கொண்டுதான் டிக்கெட்டை தற்பொழுது புக் செய்கிறார்கள் படம் வெளியானவுடன் யூடுயூப் விமர்சனங்களுக்காக காத்திருந்து விமர்சனத்தை பார்த்துவிட்டு தான் படத்திற்கு செய்கிறார்கள். எந்த படம் திரைக்கு வந்தாலும் அந்த படத்தை தவறாமல் பார்த்து அந்த படத்தின் நிறை குறைகளை யார் மனதையும் புண்படுத்தாமல் சொல்பவர் தான் சினிமா விமர்சகர் பிரசாந்த். இன்று பல சினிமா விமர்சகர்களுக்கு இவர் தான் முன்னோடி என்றே சொல்லலாம்.
11 ஆண்டுகளுக்கு முன் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தை பார்த்துவிட்டு காதில் ஹெட் செட் ஒன்றை மாற்றிக்கொண்டு ரிவ்யூ செய்த இவர். தற்பொழுது 11 ஆண்டுகள் ஆகியும் இடைவிடாமல் இன்றுவரை விமர்சனம் செய்து கொண்டுதான் இருக்கிறார் அவருடைய வளர்ச்சியை பார்த்து ஆச்சரியத்தில் உள்ளார்கள் செய்யும் சினிமா ரசிகர்கள் . சினிமாவை விமர்சனம் செய்யும் இவருடைய நேர்த்தி அனைவருக்கும் பிடித்துப் போக இவரை யூடியூபில் 7 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவர் போடும் வீடியோ சில நேரங்களில் பெரிய வைரலாகி உள்ளது.
ஆரம்பத்தில் அவரை கிண்டல் செய்த ரசிகர்கள் தற்போது அவருடைய வளர்ச்சியை பார்த்து மிரண்டு போய் உள்ளார்கள். பாண்டா என்று அவரை கலாய்த்து வந்தார்கள் ரசிகர்கள். அதற்கு பிரசாந்த் PANDA PRODUCTION என்ற ஒன்றை ஆரம்பித்து பல இளைஞர்களுக்கு குறும்படம் எடுக்க வாய்ப்பு அளித்து வருகிறார்.
பல பாராட்டுக்கள் பல கிண்டல்கள் பல மிரட்டல்களை சந்தித்து வந்த பிரசாந்த் தற்பொழுது தமிழ் சினிமாவிலும் நடித்து வருகிறார் குறிப்பாக சமீபத்தில் தனுஷை வைத்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
அது மட்டுமல்லாமல் நிறைய விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் இருமல் மற்றும் சளி நீக்கிடும் பிரபல மருந்தான nivaran90 விளம்பரத்தில் நடித்துள்ளார் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஒரு யூடியூபர் ஆக தனது வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய பிரசாந்த் டெக்ஸ்டைல் ஒன்றை தொடங்கியுள்ளார் தற்பொழுது இவரிடம் நிறைய பேர் வேலை பார்க்கிறார்கள். உடைகளை வடிவமைத்து தன்னால் முடிந்த அளவுக்கு தரமான உடைகளை ஆன்லைன் மூலமாக கொடுத்து வருகிறார். சமூக சம்மந்தபட்ட கருத்துக்களையும் முடித்த அளவிற்கு தெரிவித்து வருகிறார். வாழ்த்துக்கள் பிரசாந்த்.