கல்யாண புகைப்படம் என்பது வாழ்நாள் முழுவதும் நாம் பாதுகாத்து வைத்திருக்கும் பொக்கிஷம் போன்றது. ஒருவரின் வாழ்க்கையையே மாற்றி அமைத்த ஒருநாள் அந்த கல்யாண திருநாளை அனைவரும் புகைப்படம் எடுத்து வைப்பது வழக்கம்.
முன்பெல்லாம் திருமண மண்டபத்தில் எடுத்த திருமண புகைப்படங்கள் எடுத்தார்கள். அதன் பிறகு வீட்டிலேயே கல்யாணத்திற்கு பிறகு சிறு செட் அமைத்து எடுக்கப்பட்டது. அதன் பிறகு வெளி ஊர்களுக்கு சென்று திருமண தம்பதிகள் புகைப்படங்களை எடுத்தனர்.
சமீப காலமாக பல இளைய தம்பதிகள் திருமணப் புகைப்படங்களை மிகவும் வித்தியாசமாக அவர்கள் மன நிலைக்கு ஏற்றார் போல் எடுத்து வருகின்றனர். சமீபத்தில் கேரள ஜோடி ஒன்று போர்வை போட்டுக்கொண்டு மலைப்பகுதியில் ஓடுவதுபோல புகைப்படம் எடுத்தது மிகவும் வைரலானது.
பல விமர்சனங்களையும் இந்த ஜோடி பெற்றது இந்நிலையில் அதுபோல ஒரு இளம் ஜோடி காட்டேரி போல் மாறி உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் ஒரு மேரேஜ் போட்டோ ஷூட் ஒன்று செய்துள்ளது.
தற்போது இந்த புகைப்படமும் மிகவும் வைரலாகி வருகின்றது.