யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற படத்தில் நீச்சல் கற்றுத் தரும் டீச்சராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து கார்த்திக்கின் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்த யாஷிகா இளசுகளை தன் கவர்ச்சியால் சுண்டு இழுத்தார்.
அந்தப் படம் பெரிய சர்ச்சையான படமாக அமைந்தாலும் யாஷிகா அளவிற்கு பெரிய விளம்பரத்தை தேடிக் கொடுத்தது. யாஷிகா ஷாப்பிங் மால் சென்றாலும் அல்லது விமான நிலையத்திற்கு வந்தாலும் ரசிகர்கள் அவரை வரவேற்று செல்பி எடுத்து புகைப்படம் வெளியிடுவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகாவிற்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிய போகிறது என்று நினைத்த ரசிகர்களுக்கு தற்பொழுது பெரிய ஏமாற்றம் யாஷிகா நடித்து வந்த படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்களில் தற்பொழுது வேறு ஒருவரை நடிக்க அணுகிய வருகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.
காரணம் யாஷிகாவின் சமீபத்தில் நடந்த கார் விபத்து தானாம். வார இறுதியில் தனது நண்பர்களுடன் இரவு நேரத்தில் கார் ஓட்டி சென்ற யாஷிகா எதிர்பாராதவிதமாக கார் விபத்துக்குள்ளாகி யாஷிகா படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். யாஷிகா அவருடன் காரில் பயணம் செய்த யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் யாஷிகா மது அருந்திவிட்டு கார் ஓட்டியதாக கூறி வந்தார்கள்.
ஆனால் காவல் துறையில் விசாரணைக்குப் பிறகு யாஷிகா மது அருந்தவில்லை என்று செய்திகள் வெளிவந்தது. அதன்பின் யாஷிகா உடல்நிலை மோசமான நிலையில் இருக்கிறது. தயவு செய்து அனைவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று சிலரால் செய்திகள் பரப்பப்பட்டது சில நாட்களுக்குப் பிறகு யாஷிகாவின் தங்கை தன்னுடைய அக்கா யாஷிகா இன்னும் ஐசியூவில் தான் இருக்கிறார் என்றும் அவருக்காக பிரேயர் செய்து கொள்ளுங்கள் என்றும் கூறினார்.
அத்துடன் யாஷிகாவிற்கு ஒரு சர்ஜரி மட்டும் முடிந்திருக்கிறது. இன்னும் ஏகப்பட்ட சர்ஜரி செய்ய வேண்டிய உள்ளது என்று கூறியிருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு யாஷிகா எப்படி இருக்கிறார் என்கின்ற புகைப்படம் இணையத்தில் வெளியானது. அதில் இடுப்புப்பகுதி முதல் கால் வரை கட்டுப் போட்டுள்ளது போலவும் அவர் எழுந்து நடக்கவே ஆறு மாதங்கள் ஆகும் என்றெல்லாம் செய்திகள் வெளியாகியுள்ளன.