யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படத்தில் ஸ்விம்மிங் கற்றுத்தரும் டீச்சராக நடித்திருப்பார் அதனைத் தொடர்ந்து துருவங்கள் பதினாறு என்ற படத்தில் சுருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்று சர்ச்சைக்குரிய படமான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்து இளைஞர்களை கவர்ச்சியால் திக்குமுக்காட வைத்தார். குறிப்பாக அந்தப் படத்தில் யாஷிகா பேசும் இரட்டை அர்த்த வசனங்கள் பார்ப்பவர்களை இது தமிழ் படமா ஆங்கில படமா என்று யோசிக்க வைத்தது.
அதனைத் தொடர்ந்து நோட்டா, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களில் நடித்த யாஷிகா பிக் பாஸ் தமிழ் சீசன் 2வில் கலந்து கொண்டார். பிக்பாஸில் அரையும் குறையுமாக உடை அணிந்துகண்டு பார்ப்பவர்கள் தயவுசெய்து உடையை ஒழுங்காக போடுங்கள் யாஷிகா என்று கூறுமளவிற்கு உடை அணிந்திருந்தார்.
ஒரு பேட்டியில் தனக்கும் பாலியல் சீண்டல்கள் நிறைய நடந்திருக்கிறது என்று கூறிய யாஷிகா அவர் வசிக்கும் தெருவில் உள்ள ஒரு காவலரே யாஷிகாவிற்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும் அதனால் தைரியமாக காவல் நிலையத்தில் யாஷிகா கூறியதால் அந்த காவலரை வேறொரு இடத்திற்கு பணி மாற்றம் செய்தாக கூறியிருந்தார்.
லாக்டோன் நேரத்தில் ஏதாவது புகைப்படங்களை போட்டு இன்ஸ்டாவில் லைக் அள்ளும் யாஷிகா தற்பொழுது கிழிந்த உடைகளை போட்டுக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் உடை நாகரீகம் என்பது முக்கியம் சரியான உடை அணிந்து புகைப்படத்தை வெளியிடுங்கள் என்று கூறி வருகின்றனர்.