தற்பொழுது முகக் கவசம் அணிவது கட்டாயம் என்பதால் பலரும் தலைக்கவசம் அணிவதை மறந்துவிட்டனர். முக கவசம் எப்படி உயிரைக் காக்கிறதோ அதுபோலதான் தலைக்கவசம் உயிரைக் காக்கும்.
தலைக்கவசம் அணியாமல் உள்ளதால் பலர் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு மாநில அரசும் இதை மக்களுக்கு வலியுறுத்தி பல விதிமுறைகளை விதித்து உள்ளது. இருப்பினும் மக்கள் தற்போது முக கவசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஹெல்மெட் அணியாமல் உயிரின் மீது மிகவும் அலட்சியப் போக்கு காட்டி வருகின்றனர்.
இதனால் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் மிகுந்த பாதிப்பு ஏற்படுகின்ற. து இதனால் ஒடிசா மாநிலத்தில் தலைக்கவசம் அணியாவிட்டால் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என அரசு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது.