சித்ரா தைரியமான நடிகை தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை நடிகர்கள் மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ராவின் பெற்றோர் நடிகை ஆவதற்கு ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளவில்லை அவர்களுக்கு தெரியாமலேயே சித்ரா நடன பள்ளியில் சேர்ந்து நடனம் கற்றுக்கொண்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
மக்கள் டிவியில் பயணத்தை ஆரம்பித்த இவர் பல டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் அன்பை பெற்றவர்.
சித்ராவின் பெற்றோர்களை நாளடைவில் அவருடைய வளர்ச்சியை பார்த்து சின்னத்திரையில் நடிக்க அனுமதித்தார்கள். ஒரே சீரியலில் உச்சத்துக்கு சென்ற சித்ரா தான் சம்பாதித்த பணத்தில் பிரம்மாண்டமாக ஒரு வீடு கட்டியுள்ளார் அதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்களுக்கு திருமணம் செய்து அழகு பார்த்துள்ளார்.
ஆடம்பர காரான AUDI காரை வாங்கி இருந்தாராம் சித்ரா. இந்நேரத்தில் ஹேமந்த் என்பவரை காதலித்து வந்துள்ளார் சித்ரா அவரை வேண்டாம் என்றும் அவர் நல்லவர் இல்லை என்றும் அவருடைய நெருங்கிய தோழிகள் கூறியும் அவரைக் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டாராம் சித்ரா.
சித்ரா தூக்குப்போட்டு இறந்ததற்கு காரணம் அவரது தாய் மற்றும் கணவர் என்று காவல்துறையினர் இன்று அறிவித்துள்ளார்கள். என்ன காரணத்தினால் அவர் இறந்தார் அவர் செல்போன் எண்ணிற்கு வந்த அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் மெசேஜ்கள் அனைத்தையும் சோதனை செய்து பார்த்த போலீசாருக்கு நிறைய விஷயங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
சில விஷயங்கள் அவரது செல்போனில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் பல விஷயங்கள் வெளியில் வரும் என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.
டிவி சேனல்களில் சித்ராவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் அவரது சக நடிக நடிகைகள். அப்போது சித்ராவை பற்றியும் அவர் செய்த சேட்டைகள் பற்றியும் நினைவு கூர்ந்தனர்.
சித்ராவிற்கு குழந்தைகள் என்றால் அலாதிப் பிரியமாம் சூட்டிங் ஸ்பாட்டில் குழந்தைகளை பார்த்தால் அவர்களுடன் கொஞ்சி விளையாடி மகிழ்வாராம். குழந்தைகளை ஆசையாசையாய் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சி புகைப்படம் எடுத்து வைத்துப்பாராம் சித்ரா.