விஜே சித்ரா பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். தனது மெச்சூரிட்டியான நடிப்பால் சீரியல் ரசிகர்களை எளிதில் கவர்ந்த இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.
ஆரம்ப காலத்தில் இதெல்லாம் ஒரு முகமா நீயெல்லாம் எப்படி நடிகையா வருவ என்று அவர் முகத்துக்கு நேராகவே நிறைய பேர் கூறியிருக்கிறார்கள் ஆனால் அதை ஏதும் பொருட்படுத்தாமல் காதில் அதை எல்லாம் வாங்கிக் கொள்ளாமல் லட்சியத்தை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு முன்னேறி இருக்கிறார் சித்து இதனை ஒரு பேட்டியில் அவரே தெரிவித்திருந்தார்.
பிரபலம் அடைந்த உடன் பல நகைக்கடைகள் முதல் துணி கடைகளை திறந்து வைப்பதற்காக சித்ராவை அணுகினார்கள் பெரிய தொழிலதிபர்கள். ஒரே சீரியலில் சித்ராவின் வளர்ச்சி அனைவரையும் வியக்க வைத்தது.
சித்ரா நேற்று நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா மணிமேகலை போன்ற பிரபலங்கள் அனைவரும் நேற்று ஒரு நிகழ்ச்சி சூட்டிங்கில் பங்கேற்றனர்.
அப்போது நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா சித்ராவை காண்பித்து மேடம் லவ் பண்ண ஆரம்பிச்ச நேரம் ஒரே பிஸி என்று கிண்டல் செய்தார் அப்பொழுது செல்போனில் ஏதோ தீவிரமாகவும் வேகமாகவும் பேசிக்கொண்டிருந்த சித்ரா வீடியோவிற்கு சிரித்தபடி போஸ் கொடுத்தார்.
அதனை வைத்துப் பார்க்கையில் நேற்று ஏதோ தொலைபேசியில் வாக்குவாதம் நடந்தது போல தெரிகிறது தயவு செய்து தொலைபேசி உரையாடலை கேளுங்கள் கேட்டு நடவெடிக்கை எடுங்கள் என்று கூறி வருகின்றனர் அவரது ரசிகர்கள். சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.