மக்கள் தொலைக்காட்சியில் தனது பயணத்தை ஆரம்பித்த சித்ரா படிப்படியாக முன்னேறி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் தலைகாட்டி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் முல்லை ஆகவே வாழ்ந்து வந்தார்.
விஜே சித்ரா டிசம்பர் 9ஆம் தேதி நசரத்பேட்டை அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரு தைரியமான பெண் அதுமட்டுமல்லாமல் சைக்காலஜி மாணவி சித்ரா எப்படி தற்கொலை செய்துகொள்வார் என்று சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் கேள்வி எழுப்பி வந்தனர்.
அனைவருக்கும் அறிவுரை கூறும் சித்ரா இந்த முடிவை எடுத்திருக்க மாட்டார் என்று கூறி வந்தனர். போலீஸ் விசாரணையில் இது கொலையல்ல தற்கொலை தான் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டார்கள் ஆனால் சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு என்ன காரணமாக இருக்கும் யாருடைய அழுத்தமாக இருக்கும் என்று விசாரிக்கத் தொடங்கினார்கள். சித்ராவின் கணவர் ஹேமந்த் 9 மணிநேரம் போலீசார் விசாரணை நடத்திய பிறகு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
சித்ராவின் தாயாரும் ஹேமந்த் மீது சந்தேகப்பட்டனர். நீண்ட நேரம் விசாரித்த போலீசார் கடைசியில் ஹேமந்த் குற்றவாளி என்று கைது செய்து சிறையில் அடைத்தனர். சித்ரா இறந்து வாரங்கள் ஆகியும் அவருடைய நினைவுகள் இன்றும் ரசிகர்களிடம் இருந்து கொண்டே இருக்கிறது.
இந்நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு சித்ராவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விஜய் டிவி ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது அது சம்பந்தப்பட்ட ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ப்ரோமோவில் சித்ரா தனது தந்தையுடன் பைக்கில் செல்லுவது போலவும், அவர் கைபிடித்து தனது தந்தையுடன் வெளியில் செல்வது போலவும், சித்ரா சிரித்துக்கொண்டே சிலம்பம் சுற்றும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது . அந்த ப்ரோமோவில் கடைசியாக வரும் “வாய்ப்பு இருந்தால் வந்து போ மகளே” என்று வரும் வசனம் ரசிகர்களை கண் கலங்க வைக்கிறது.