Saturday, April 27, 2024
-- Advertisement--

சித்ரா கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா என்று சோதிக்க முயற்சி செய்த சித்ராவின் கணவர்..!!! திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ஹேமந்த் நண்பர்.

விஜே சித்ரா இவர் இறந்து பல நாட்கள் ஆகியும் இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது இவருடைய தற்கொலை. சித்ரா தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் அவருடைய கணவர் ஹேமந்த் தான் என்று போலீசார் தரப்பில் ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.

சித்ராவின் கணவர் ஹேமந்த் பற்றி ஏகப்பட்ட புகார்கள் சித்ரா மறைவிற்குப் பின் தான் வெளிவருகிறது. பல பெண்களுடன் பழகி பணம் வாங்குவது, தனக்கு பிடித்த பெண்களை டார்கெட் செய்து அவர்களுடன் இருப்பது போன்ற வேலைகளை சைலன்டாக செய்திருக்கிறார் ஹேமந்த்.

தற்பொழுது இந்த வழக்கு சிபிஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வரும் இந்த நிலையில் ஹேமந்தை பற்றி பல திடுக்கிடும் தகவலை அவரது நெருங்கிய நண்பர் யூட்யூப் சேனல் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஹேமந்த்தின் நெருங்கிய நண்பரான ரோஹித் கொடுத்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது. ரோஹித்தும் ஹேமந்த்தும் 10 வருட நண்பர்களாம். சித்ரா ஏதோ ஒரு நபர் மூலம் ஹேமந்த்க்கு அறிமுகமாக இருவரும் காதலிக்கத் தொடங்கினார்களாம்.

சித்ராவை அடிக்கடி சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பாராம் ஹேமந்த். சித்ரா யாரிடம் பேசினாலும் அதனை ஒட்டுக் கேட்டுக் கொண்டே இருப்பாராம் இதுபற்றி கூட சித்ரா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.

சித்ரா எங்கு செல்கிறார் அங்கு கூடவே செல்வாராம் அதுபோல பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடிக்கக்கூடாது என்று கூறியும் தகராறு செய்தாராம். குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதலிரவு காட்சியில் நடித்ததால் ஹேமந்த் டென்ஷனாகி சித்ராவை படு மோசமாகத் திட்டி உள்ளார்.

சித்ராவை அடிக்கடி சந்தேகம் புத்தியுடன் பார்த்த ஹேமந்த் சித்ரா கன்னித் தன்மையுடன் இருக்கிறாரா என்று நெருங்கிய நண்பரான ரோஹித் மனைவியிடமே கேட்டாராம். அதனைத் தொடர்ந்து டிநகரில் உள்ள ஒரு மருத்துவரிடம் சித்ரா கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா என்று எப்படி பரிசோதனை செய்வது என்று கேட்டுள்ளார் ஹேமந்த். அந்த மருத்துவர் இந்த விசயத்தை சித்ராவிடம் ஏ கூறி உங்கள் இருவருக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டாராம்.

சித்ரா இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு மசனகுடி ட்ரிப் சென்றார்களாம். அப்போது சித்ரா தங்கியிருந்த அறையில் ஒரே சத்தம் கேட்டதாம் சித்ராவை அடிப்பது போலவும் தகாத வார்த்தையால் திட்டியது போன்றவும் இருந்ததால் உடனே ரோஹித் மற்றும் அவரது மனைவியும் சேர்ந்து சித்ராவின் அறைக்கு செல்ல இருந்தார்களாம் அதன்பின் கணவன் மனைவி சண்டை இடையே தலையிட வேண்டாம் என்று ஒதுங்கிக் கொண்டார்களாம்.

அப்பொழுதுதான் சித்ரா ரோஹித் மற்றும் அவரது மனைவியிடம் கூறி அழுதிருக்கிறார். அடிக்கடி ஹேமந்த் அவரை சந்தேகப்படுவதாகவும் சீரியலில் நடிக்க கூடாது என்று கூறியதோடு சீரியலில் நடிப்பவர்கள் உடன் சந்தேகப்படுவதாகவும் கூறி கதறி அழுதுள்ளார்.

ரோஹித் கொடுத்துள்ள பேட்டியில் ஹேமந்த் ஒரு சைக்கோ அதன் பணத்துக்காக எது வேணாலும் செய்வான். சந்தேக புத்தி அதிகம் கொண்டவன். பல பெண்கள் பழக்கம் அவனுக்கு உண்டு.

சித்ரா அவனது வாழ்க்கையில் வருவதற்கு முன் பிரபல VJ ஒருவருடன் ஒன்றாக திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவன் என்று பல திடுக்கிடும் தகவல்களை கொடுத்துள்ளார்.

யார் அந்த பிரபல VJ..!!! சித்ராவின் இறப்பிற்குப் பிறகு கூட வாய் திறந்து ஹேமந்த் பற்றிய உண்மைகளைக் கூறி இருக்கலாமே என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

சித்ரா வாழ்க்கையில் மட்டும் அல்ல இன்னும் பல பேர் வாழ்க்கையில் இது போன்ற சந்தேக குணம் பிடித்த மனித மிருகம் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles