Friday, May 17, 2024
-- Advertisement--

விஜே சித்ராவின் கணவர் மேலும் ஒரு வழக்கில் மறுபடியும் கைதானார்..!!! தீவிர விசாரணையில் சித்ரா கணவர்…!!!

சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரின் மூலமாக பிரபலமானவர் தான் VJ சித்ரா சில நாட்களுக்கு முன்பு விஜே சித்ரா தற்கொலை செய்துகொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. VJ சித்ராவின் தற்கொலையின் மர்மங்கள் பற்றி இன்று வரை விசாரணை செய்து வருகிறார்கள் காவல்துறையினர்.

முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றவர் தான் விஜே சித்ரா. தைரியமான பெண் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் எந்த காரணம் புரியாமல் குழம்பி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

ஒரு பக்கம் இது தற்கொலை இல்லை என்றும் கூறி வருகிறார்கள். இன்றுவரை சரியான முடிவிற்கு வர முடியாத அளவிற்கு இருக்கிறது சித்ராவின் தற்கொலை வழக்கு.

சித்ராவின் காதல் கணவர் ஹேமந்த் அவர்களை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து அவரை சிறையில் அடைக்கப்பட்டார். மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கித் தருவதாக கூறி ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் பண மோசடி செய்ததாக அவர் மீது ஜே ஜே நகர் காவல் நிலையத்தில் 2017 ஆம் ஆண்டு புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.

பணமோசடி வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் ஹேமந்தை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மறுபடியும் கைது செய்து காவலில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles