விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வந்ததிலிருந்து இந்த நிமிடம் வரை புரியாத புதிராக இருக்கிறது சித்ராவின் இறப்பு இந்த நேரத்தில் சித்ராவின் கணவர் பற்றி பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார் அவருடைய நெருங்கிய தோழி ரேகா நாயர்.
ரேகா நாயர் சித்ரா இருவரும் ஒன்றாக விளம்பர படங்களில் நடிப்பதற்காக செல்வார்களாம் அப்போது சித்ரா ரேகாவிடம் நிறைய விஷயங்களை ஷேர் செய்து கொள்வாராம்.
ஒரு தடவை கூகுளில் சித்ராவின் புகைப்படத்தை விபச்சாரி என்று யாரோ ஒருவன் வெளியிட்டு இருந்தாராம் அதனைப் பார்த்து அதிர்ந்துபோன சித்ரா ரேகா நாயருக்கு உடனே கால் செய்து இப்படி எல்லாம் இணையத்தில் தவறாக போடுகிறார்களே என்ன செய்யலாம் என்று கவலையுடன் கேட்டாராம் அதனை நீக்குவதற்கான வழிகளை கூறினாராம் ரேகா. இதுபோல பல பிரச்சினைகள் பல தீர்வுகளை அவருடைய நெருங்கிய தோழி ரேகா சித்ராவிற்கு கொடுப்பாராம்.
ஹேமந்த் அவருடன் சித்ராவிற்கு பழக்கம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் பழகி அதன்பின் நிச்சயம் செய்து கொண்டு பதிவு திருமணம் செய்து கொண்டார்களாம். ஹேமந்த்தின் புகைப்படத்தை சித்ராவின் நிச்சயதார்த்த புகைப்படங்களில் தான் பார்த்தாராம் ரேகா நாயர்.
ஹேமந்த் புகைப்படத்தை பார்த்த உடன் சித்ரா நீ எவ்வளவோ கஷ்டங்களை கடந்து வந்திருக்க ஆனால் நீ உன் வாழ்க்கைத்துணை தவறாக தேர்வு செஞ்சிருக்க அவன் எல்லா பப்புக்கு வருவான் எல்லா பொண்ணுங்களுக்கும் அவன நல்லா தெரியும். சென்னையில் உள்ள பாதி பெண்களுக்கு அவனை தெரியும் என்று சித்ராவிடம் கூறியுள்ளார். இந்த விஷயங்கள் தெரிஞ்சும் சித்ரா ஹேமந்தை காதலித்து உள்ளார்.
சித்ராவும் ஹேமந்த் திருமணம் முடிந்துவிட்டது அப்புறம் எதுக்கு குளிக்கும்போது சித்ரா அவரது கணவரை வெளியில் இருக்க சொல்லி இருப்பார் என்று கேள்வியும் எழுப்பினார் அவரது தோழி ரேகா.
போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்த பிறகு அனைத்து உண்மையும் தெரியும் என்று கூறியுள்ளார். இந்தப் பேட்டியை பார்த்த அவரது ரசிகர்கள் இப்படி ஒரு பையனை ஏன் காதலிக்க வேண்டும் அவருக்காக ஏன் உயிரை விட வேண்டும் என்று உருக்கத்துடன் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.