Sunday, April 28, 2024
-- Advertisement--

3 மாதங்களுக்கு பிறகு VJ சித்ரா தங்கியிருந்த ஹோட்டல் அறை திறப்பு..!!! ஹோட்டலில் மதுபாட்டில்கள்..!!! பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்..!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரின் மூலம் மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தவர் தான் VJ சித்ரா இவர் சில மாதங்களுக்கு முன்பு பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

VJ சித்ரா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரவு நேரத்தில் தான் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலின் அறைக்கு திரும்பி உள்ளார். அந்த அறையில் VJ சித்ராவின் காதல் கணவர் மட்டும் அவருடன் உடன் இருந்துள்ளார். அறைக்குள் நுழைந்த சித்ரா உடை மாற்றப் போகிறேன் வெளியில் நில்லுங்கள் என்று தனது காதல் கணவர் ஹேமந்த்தை வெளியில் நிற்க சொன்னதாகவும் அவரது கணவர் வெளியில் நின்று கொண்டு இருக்கும்போது சித்ரா திடீரென்று அந்த அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டி இறந்ததாகவும் செய்திகள் வெளிவந்தது.

சித்ரா தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்ளும் ஆளில்லை என்று அவருடைய நண்பர்கள் முதல் அனைவரும் வைத்த கோரிக்கையின் பேரில் போலீஸ் விசாரணை நடந்து வந்தது. கிட்டத்திட்ட சித்ராவின் வழக்கு குறித்து 65 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டார்கள். தற்பொழுது சித்ராவின் கணவர் ஹேமந்த் ஜாமினில் வெளியில் உள்ளார்.

சமீபத்தில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சித்ராவின் அறையை நீண்ட மாதங்களுக்கு பின் திறந்தனர். சித்ரா உபயோகித்த பொருட்களை அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அந்த அறையிலிருந்து வெளியேற்றி வந்தார்கள்.

அன்பு மகள் சித்ரா உயிரை விட்ட அறையை திறந்தவுடன் சித்ராவின் தாய் கதறி அழுது மெத்தையில் அமர்ந்து என் பொண்ண கொன்னுட்டாங்க என்று அழுதார். சித்ரா அந்த அறையில் எப்படி தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பார் கட்டிலுக்கும் மின்விசிறிக்கும் தொலைவே இல்லை எனக்கே காட்டில் மேல் நின்றாள் மினிவிசிறியை தொடமுடிகிறது சித்ரா என்னை விட உயரம் எப்படி தூக்கு மாட்டி தற்கொலை செய்து இருப்பார் என்று அழுதுகொண்டே கேள்வியும் முன்வைத்தனர்.

சித்ரா தங்கியிருந்த அறையில் மது பாட்டிலை சித்ராவின் தந்தை கையில் எடுத்து இதை சித்ரா குடித்து இருக்கமாட்டார் ஹேமந்த் தான் குடித்திருப்பர் என்று கூறியவர் இந்த மதுபாட்டில் எப்படி இந்த அறைக்கு வந்தது இந்த ஹோட்டலில் விற்பனை செய்கிறார்களா என்று கேள்வியும் முன்வைத்தார்.

என் மகள் கஞ்சா அடிப்பாள், மது அருந்துவால் என்று செய்தி வெளிவருகிறது ஆனால் ஹேமந்த் குடிகாரன் என்ற செய்தி வெளியே இதுவரை வரவில்லை உங்கள் வீட்டில் உள்ள பெண்ணுக்கு இப்படி நடந்தால் விடுவீங்களா என்று சித்ராவின் தாய் கதறி அழுதார்.

இதுகுறித்து சித்ராவின் நெருங்கிய தோழி ரேகா என்பவர் ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை கொலைதான் செய்யப்பட்டிருக்கிறார் இதுகுறித்து கமிஷனர் அவர்களிடம் எல்லா விஷயங்களையும் எடுத்துக் கூறி விட்டேன் ஆனால் எந்த ஒரு ஆதாரமும் கையில் இல்லாததால் சரியான நியாயம் வாங்கித் தர முடியவில்லை.

சித்ரா இந்த அளவிற்கு பிரபலமாகி இருக்கிறார் என்றால் அவளுடைய உழைப்பு தான் காரணம் ஆனால் சித்ராவிற்கு என்னென்ன பிரச்சினைகள் சுற்றி இருந்தது யாரெல்லாம் பிரச்சினை கொடுத்தார்கள், யாரெல்லாம் தொல்லை கொடுத்தார்கள், ஹேமந்த் சித்ராவிற்கு நடந்த சண்டைகள் இது அனைத்தும் எனக்கு மட்டுமே தெரியும்.

பல வருடங்களாக சித்ராவின் நெருங்கிய தோழியாக இருக்கிறேன் சித்ராவிற்கு வரும் பிரச்சனைகள் அனைத்தும் எனக்கு தெரியாமல் இருக்காது. அந்த அளவிற்கு நெருக்கமாக சித்ரா என்னுடன் இருந்தும் ஒரு சில விஷயங்கள் எனக்கே தெரியாமல் செய்துள்ளார்.

சித்ரா கண்டிப்பாக தூக்கு மாட்டி கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் ஆள் இல்லை என்று கூறிய அவர் ஹேமந்த் சித்ரா இருவருக்கும் குடி பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் உண்டு என்பதையும் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles