Friday, May 10, 2024
-- Advertisement--

சித்ராவின் உடலை பார்த்து கதறி அழுத மனோபாலா..!!! சித்ராவின் சாவில் மர்மம் இருக்கு.

பிரபல தொகுப்பாளினி சித்ரா இறப்பு செய்தி கேட்டவுடன் சின்னத்திரை நடிகர்கள் படை எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவமனையில் நிற்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அவருடன் நடித்த சக நடிகர்-நடிகைகள் மற்றும் அவரது நண்பர்கள் சித்ராவின் உடலை மருத்துவமனையில் பார்த்து கதறி அழுதபடி வெளியில் வருகின்றனர்.

சித்ரா பல அவமானங்களை கடந்து வெற்றி பெற்ற ஒரு நடிகை அவர் பிரபலம் அடைந்த பின்பும் அனைவரிடமும் மரியாதையுடனும் அன்புடனும் பழகக்கூடியவர் என்று சித்ராவின் நினைவுகளை ஒரு பக்கம் பதிவு செய்து வருகின்றனர்.

மருத்துவமனைக்கு வந்த நடிகர் மனோபாலா கண்ணீர் விட்டு கதறி அழ தொடங்கினர். தைரியமான பொண்ணு பிறருக்கு தைரியம் சொல்லும் பொண்ணு இந்த முடிவு எப்படி எடுத்துச்சு என்று கூறியதோடு சித்ரா சாவில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு சாவிற்கும் பின் ஒரு மர்மம் இருக்கும் அந்த வகையில் சித்ராவின் சாவிற்கு பின் மர்மம் இருக்கிறது என்று கூறி அழத் தொடங்கியவர். தயவு செய்து சின்னத்திரை நடிகர் நடிகைகள் யாரும் இது போன்ற முடிவை எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles