விஜே சித்ரா மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் கஷ்டப்பட்டு படிப்படியாக உயர்ந்து பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி கடைசியில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார்.
சித்ராவின் துறுதுறுப்பான நடிப்பு ரசிகர்கள் மிகவும் பிடித்துப்போக அவருக்கென்று ஏகப்பட்ட சமூக வலைதளப் பக்கங்கள் ஆரம்பித்தார்கள் அவரது ரசிகர்கள். இன்றுவரை முல்லையாக மக்கள் மனதில் இடம் பிடித்த சித்ரா இன்று இல்லை என்பது ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சித்ரா திடீர் மறைவு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனது வருங்கால கணவர் மற்றும் தொழிலதிபரான ஹேமந்த் என்பவருடன் ஒரே அறையில் தங்கி இருந்தாராம்.
ஷூட்டிங் முடிந்தவுடன் அவரது அறைக்கு சென்றுள்ளார் சித்ரா அப்போது நான் குளிக்க செல்கிறேன் கொஞ்சம் வெளியில் வெயிட் பன்றீங்களா என்று கேட்டுள்ளார் சித்ரா உடனே ஹேமந்த் அந்த அறையை விட்டு வெளியில் வைத்திருந்தாராம்
நீண்ட நேரம் ஆகியும் சித்ரா வெளியே வராததால் ஹேமந்த் ஹோட்டல் நிர்வாகிகளிடம் செய்தி தெரிவித்து மாற்று சாவியை வைத்து அந்த அறையை திறந்து இருக்கிறார்கள்.
திறந்த பின் தான் தெரிந்ததாம் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று, இதனை பார்த்த அவரது வருங்கால கணவர் ஹேமந்த் அதிர்ந்து போனாராம். தற்போது போலீசார் சித்ராவின் வருங்கால கணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.