Sunday, April 28, 2024
-- Advertisement--

விஜே சித்ராவிற்கு தப்பான பழக்கம் இருந்ததா..!!! திடுக்கிடும் தகவல்கள் போலீசார் விசாரணையில் அம்பலம் என தகவல் .

விஜே சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் முல்லையாக நடித்து மாபெரும் வரவேற்பை மக்களிடம் பெற்ற ஒரு நடிகை. தனக்கான அடையாளம் கிடைக்காதா என்று பல வருடங்கள் கஷ்டப்பட்டு படிப்படியாய் முன்னேறி தற்பொழுது மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்தவர்.

முல்லை போன்ற மருமகள் நமக்கு கிடைக்க மாட்டார்களா என்று பல மாமியார்கள் இன்றும் ஏங்குகிறார்கள். அதுபோல முல்லை போன்ற பெண் நமக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கனவு காணும் இளைஞர்களும் இருந்தார்கள். முல்லை ஆக இன்றும் சித்ரா அனைவர் மனதிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

தைரியமான பெண்ணாக இருந்த சித்ரா எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்று சினி வட்டார நண்பர்களால் இன்றுவரை கேட்கப்படும் ஒரு கேள்வியாக இருந்துவருகிறது. பலருக்குப் புத்திமதி சொல்லும் சித்ரா இந்த முடிவை எடுத்து இருக்க வாய்ப்பே இல்லை என்று அழுகிறார் சித்ராவின் தாயார். இந்நினையில் சித்ராவின் தற்கொலை தொடர்பாக பல கோணங்களில் விசாரணை செய்யப்பட்டு அவரது கணவர் ஹேமந்த் அவர்களை சிறையில் அடைத்தனர் போலீசார்.

சித்ராவை பற்றி நம்ப முடியாத தகவல்கள் எல்லாம் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. சித்ராவின் ஹேண்ட் பேக்கை போலீஸார் சோதனை செய்ததாகவும் அதில் இருந்து 150 கிராம் கஞ்சா பொட்டலத்தையும் மற்றும் அதனை சிகரெட் லோடு செய்யும் கருவியும் கைப்பற்றி உள்ளதாகவும், சித்ராவிற்கு குடிப்பழக்கமும் கஞ்சா பழக்கமும் உண்டு என்று செய்திகள் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது அதே நேரத்தில் சித்ராவின் வழக்கை வேறு பாதையில் எடுத்துச் செல்வதற்காக இப்படி செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

எது எப்படியோ சித்ரா என்ற நல்ல நடிகை தற்போது உயிருடன் இல்லை என்பதினால் அவரைப் பற்றி ஏதாவது செய்திகளை இணையத்தில் பரப்ப வேண்டாமே என்று கூறுகிறார்கள் இணையவாசிகள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles