விஜே சித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் கடந்த டிசம்பர் மாதம் தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் இன்று வரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
சித்ராவின் துறுதுறுப்பான நடிப்பு ரசிகர்கள் மிகவும் பிடித்துப்போக அவருக்கென்று ஏகப்பட்ட சமூக வலைதள பக்கங்களை இன்றளவும் அவரது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அவர் இன்றுவரை முல்லையாக மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார். இப்பொழுது பாண்டியன் ஸ்டோரில் முல்லை கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார். ஆனால் சித்ராவின் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
மேலும் சித்ராவின் பிறந்த நாளான மே 2 அன்று அவரின் ரசிகர்கள் அனைவரும் ஒன்றுகூடி சித்ரா இல்லாவிட்டாலும் அவரின் பிறந்தநாள் அன்று நாங்கள் பல்வேறு நற்பணி செய்வோம். முதலில் மரக்கன்று நட்டு உள்ளோம். பிறகு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் ஒரு நாள் சிறப்பு அன்னதானம் வழங்கி உள்ளோம். அதேபோல் அவரின் பெற்றோர்கள் மற்றும் ரசிகர்கள் சித்ராவின் புகைப்படத்தை வைத்து மாலை அணிவித்து கேக் வெட்டி சித்ராவின் புகைப்படத்திற்கு கேக் கொடுத்து பிறந்தநாளை வருத்தத்துடன் கொண்டாடியுள்ளனர்.
அதேபோல் அவரது ரசிகர்கள் சித்ராவின் புகைப்படத்தினை இணையதளங்களில் வெளியிட்டு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் வி மிஸ் யு சித்ரா என்று புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.