Sunday, May 19, 2024
-- Advertisement--

விருதுநகர் அருகே Covid-19 பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து..!

கொரோனா கிருமிப்பரவலின் தாக்கம் காரணமாக அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அனைத்து துறைகளும் மூடப்பட்டன.தற்போது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சாத்தூர் அருகே வள்ளி மேல் பகுதியில் கோவில்பட்டியை சேர்ந்த வெற்றிவெல் என்பவர் சொந்தமான பட்டாசு கடைகள் வைத்துள்ளார் .

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக பட்டாசு கடைகள் திறக்கப் படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக கடைக்குள் இருந்த பட்டாசுகள் வெடிக்க துவங்கியுள்ளன.

சிறிது நேரத்தில் கடை முழுவதும் தீ பரவியதால் அப்பகுதியில் பட்டாசு சத்தத்தில் அதிர்ந்தது. இந்த நிலையில் தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சாம்பலாயினர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles