Monday, May 20, 2024
-- Advertisement--

வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை மட்டும் கரைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி ..!

தமிழகத்தில் கொரோனா கிருமிப்பரவல் காரணமாக நாளை கொண்டாடவிருக்கும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்க மற்றும் ஊர்வலம் செல்ல தமிழக அரசு தடை விதித்து நிலையில் விதிக்கப்பட்ட தடையில் தளர்வுகள் அளிக்கப்பட்ட வாய்ப்புள்ளதா என்று தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற கேள்விக்கு தமிழக அரசு பதில் அளித்து கட்டுப்பாடுகளில் இருந்து தகவல் அளிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்த நிலையில் அரசின் பதிலை ஏற்று தீர்ப்பு வழங்கியுள்ளனர் சென்னை நீதிமன்றம்.

அதில் வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை மெரினா கடற்கரையில் கரைப்பது தவிர்த்து அருகில் உள்ள ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் தனிமனிதர் சென்று கறைக்கலாம் என்று உத்தரவிட்டு உள்ளனர்.

தமிழக அரசின் உத்தரவின்படி வீடுகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அனுமதி அளித்த நிலையில் அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles