விக்ரம் படத்தை பார்த்த பின்பு இளசுகளின் தேடல் மாயா தான். யாரு இந்த பெண் என்று இணையத்தில் இளசுகள் தேட ஆரம்பித்தார்கள் அந்த அளவிற்கு ஒரே காட்சியில் ரசிகர்களை பெற்றவர் தான் மாயா.
விபச்சார பெண்ணாக நடித்திருந்த மாயா கமலுடன் நடித்த அனுபவத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார். அவர் கூறியது நான் இதுவரை ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நான் சில படங்கள் நடித்துள்ளேன். ரஜினி சார் 2 .0 படத்திற்கு ஆடிஷன் சென்றேன் அதன்பின் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் என்ற படத்தில் சில காட்சியில் நடித்து இருந்தேன் தற்பொழுது லோகேஷ் சார் இயக்கத்தில் விக்ரம் படத்தில் கமல் சாருடன் நடித்தது எனக்கு பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.
ஒரு சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதை மிகவும் ஜாக்கிரதையாக கையாண்டார்கள். அந்த கதாபாத்திரம் கொஞ்சம் தவறாக இருந்தால் கூட ரசிகர்கள் மத்தியில் பெரிய தவறாக மாறியிருக்கும். கமலஹாசன் சார் லோகேஷ் அவர்களிடம் ஏற்கனவே கூப்பிட்டு கூறியிருந்தார் அதுபோல உலகநாயகன் படம் அனைவரும் தியேட்டரில் பார்க்க வருவார்கள் முகம் சுளிக்கும் படி இருக்க கூடாது என்பதை தெளிவாக மனதில் வைத்துக் கொண்டு லோகேஷ் சார் அவர்களும் அந்த காட்சியை எடுத்திருந்தார். கமல் சார் எப்படி வேலை செய்வர் என்பது தெரியும். அது போல பாஹத் பாசில் சார் கண்ணு அங்கையும் இங்கையும் விளையாடும் அவரு கண்ணாலே ஒன்னு பண்ணுவாரு.
நான் அந்த காட்சியை உள்வாங்கி நடித்தேன் விபச்சாரப் பெண்ணாக இருந்தாலும் காலேஜில் படிக்கும் பெண் ஜாலிக்காக இதை செய்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டு FUNNY ஆக நடித்துக் கொடுத்தேன். அதுபோன்று டப்பிங் பேசும்போது கூட முனங்கல் சத்தம் நான் தான் கொடுத்தேன் ஆனால் தியேட்டரில் இவ்வளவு வரவேற்பு பெறும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை.
டப்பிங் பேசும்போது அனிருத் சார் அவருடைய பின்னணி இசைக்கு ஏற்பது போல் என்னை முனங்கல் கொடுக்க சொன்னார் நானும் அதேபோல செய்து கொடுத்தேன் அந்த காட்சியில் தியேட்டரில் பார்க்கும்போது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அனிருத் சார் லெஜெண்ட். எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது என்று மாயா கிருஷ்ணன் கூறியுள்ளார்.