Saturday, May 18, 2024
-- Advertisement--

விஜய் சேதுபதி மகளை கொச்சையாக பேசிய நபர்..!!! பிடிபட்ட நபரிடம் விசாரணை.

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த நல்ல நடிகர். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து மக்களின் மனதில் மக்கள் செல்வனாய் வலம்வந்து வருகிறார் விஜய் சேதுபதி. எந்த ஒரு கதை கொடுத்தாலும் அதனை யதார்த்தமாக நடித்து அசத்தும் திறமை கொண்டவர். பல வருடங்களாக சினிமாவில் நடித்து வந்தவர் கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்பொழுது முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் இருக்கிறார்.

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த படம் தான் 800. இந்தப் படம் முத்தையா முரளிதரன் என்ற இலங்கை கிரிக்கெட் வீரர் வாழ்க்கை வரலாறு பற்றிய படம் என்பதால் இந்தப் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று பல்வேறு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. விஜய் சேதுபதி இந்த படத்தில் நடித்தே ஆவேன் நான் ஒரு நடிகன் நல்ல கதைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறி வந்தார். பல தரப்பிலிருந்து விஜய் சேதுபதிக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர் ஆனால் அதனை பெரிதாக பொருட்படுத்தாத விஜய்சேதுபதி முத்தையா முரளிதரன் போல தனது தோற்றத்தை மாற்றி 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஒன்றை வெளியிட்டார். அச்சு அசல் முத்தையா முரளிதரன் போன்ற தோற்றத்தில் உள்ளார் என்று ஒரு சிலர் அவரை பாராட்டி வந்தனர் ஆனால் பல தரப்பு விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தது.

நேற்று முத்தையா முரளிதரன் விஜய் சேதுபதியை இந்த படத்தில் இருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டார். விஜய்சேதுபதியின் சினிமா எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இந்தப் படத்தை விட்டு அவர் விலகுவது தான் சரி என்று முத்தையா முரளிதரன் கூறியிருந்தார். சில மணி நேரத்தில் விஜய் சேதுபதி எல்லாம் முடிந்துவிட்டது என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். 800 படத்தை விட்டு விலகினார் விஜய் சேதுபதி. நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து அவரது தாயார் இறந்ததற்கு வருத்தம் தெரிவித்த விஜய் சேதுபதி முதலமைச்சரின் அம்மாவின் புகைப்படத்திற்கு பூ தூவி அஞ்சலி செலுத்தினர் அந்த புகைப்படங்கள் இணையத்தில் நேற்று வெளிவந்தது.

விஜய் சேதுபதி அந்தப் படத்தை விட்டு விலகிய பின்னும் அவருக்கு தொடர்ந்து ட்விட்டர் வழியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவரை தமிழினத் துரோகி என்றெல்லாம் கூறி ஒரு சிலர் ட்விட்டரில் ட்விட் செய்து வந்தனர். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவருடைய பிஞ்சு மகளின் புகைப்படத்தை வெளியிட்டு கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி பேச ஆரம்பித்தனர். மோசமான வார்த்தைகளால் அந்த குழந்தையை சித்தரித்த அந்த கேவலமான பிறவிகள் மீது அனைவரும் நடவடிக்கை எடுக்கக்கோரி ட்விட்டரில் போலீஸாருக்கு வேண்டுகோள் விடுத்தனர். தற்பொழுது விஜய் சேதுபதி மகள் பற்றி மோசமாக பதிவிட்ட ரித்திக் என்பவர் மீது சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

நடிகனும் மனிதன் தானே அவர் பெற்றதும் பெண்தானே இப்படி கொச்சையாக பேச எப்படி இதுபோன்றவர்களுக்கு மனம் வருகிறது என்று அனைவரும் கோபத்தில் உள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles