தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விஜய் சேதுபதி சமீபத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றார்.
மாஸ்டர் படத்தில் பவானி என்ற கதாபாத்திரத்தில் மனிதன் அசத்தி இருப்பார். ஒரு நடிகர் ஹீரோவாகவும் நடிக்கிறார் வில்லனாகவும் அசத்துகிறார். நான் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் தனக்கு கதையும் கதாபாத்திரமும் பிடித்து விட்டால் கெஸ்ட் ரோலில் கூட தயார் என்று நடிக்கும் மனிதர்.
விஜய் சேதுபதி தனது பிறந்த நாளை இன்று கேக் வெட்டி கொண்டாடினார். அந்தப் புகைப்படங்கள் இன்று இணையத்தில் வைரல் ஆனது. தனது சக நடிகர்களுடன் பட்டாக்கத்தி ஒன்றை வைத்து கேக் வெட்டி இருந்தார் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இதுபோன்று பட்டாக்கத்தி வைத்து கேக் வெட்டிய ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
விஜய் சேதுபதி பட்டா கத்தியை வைத்து கேக் விட்டதால் அவர் கைது செய்யப்படுவார் என்று இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு விஜய்சேதுபதி தரப்பிலிருந்து உடனடியாக அறிக்கை ஒன்று வெளியானது அதில் எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி பிறந்தநாளை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முன்பு எனது அலுவலத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
அதில் பிறந்தநாள் கேக்கை பட்டாக்கத்தியால் வெட்டி இருப்பேன் தற்போது இயக்குனர் பொன்ராம் அவர்கள் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளேன் அந்த படத்தின் கதைப்படி படத்தின் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் ஆகையால் அந்த படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடும் போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கை வெட்டினேன்.
இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் இனிமேல் இதுபோன்ற விஷயங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார் அதனை தொடர்ந்து இந்த சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார்.