விஜயகாந்த் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு சில ஹீரோக்களின் இவரும் ஒருவர். முதலில் இவர் சினிமாவில் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும்போதே இவருக்கு தமிழ் சரியாக பேசத் தெரியவில்லை என்று வேறொரு முன்னணி நடிகரை அவர் முன்னே நடிக்க வைத்தாராம்.
அதனைத் தொடர்ந்து சில தமிழ் படங்களில் விஜயகாந்த் நடித்தாராம். அந்தப் படங்கள் சரியாக ஓடவில்லை என்பதால் விஜயகாந்த் ராசியில்லாத நடிகர் என்று தமிழ் சினிமாவில் ஒரு சிலரால் ஒதுக்கி வைக்கப்பட்ட நேரமும் அது. அப்பொழுதுதான் தளபதி விஜயின் தந்தை சந்திரசேகர் “சட்டம் ஒரு இருட்டறை” என்ற படத்தை எடுத்து விஜயகாந்தின் மார்க்கெட்டை எகிற செய்தார் செய்தார்.
அந்தப் படத்திற்குப் பிறகு விஜயகாந்த் அவர்களுக்கு நிறைய தமிழ் படங்கள் புக் ஆனது. விஜயகாந்த் அவர்களும் படு பிசியாக காணப்பட்டார். அந்த நேரத்தில் விஜயகாந்த் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தார். அப்பொழுது தனது மகனை ஹீரோவாக அறிமுகம் செய்தார் சந்திரசேகர்.
விஜயின் முதல் படம் “நாளைய தீர்ப்பு” அந்தப் படம் ஓரளவு நன்றாக இருந்தாலும் படம் பெரிய அளவில் ஓடாததால் மனவேதனையில் இருந்தால் சந்திரசேகர் விஜயகாந்தை கூப்பிட்டு தனது மகன் விஜயுடன் சேர்ந்து ஒரு படம் செய்தால் எனது மகனின் வளர்ச்சிக்கு பெரிய துணையாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதனை கேட்ட விஜயகாந்த் சற்றும் யோசிக்காமல் கண்டிப்பாக தம்பி கூட படம் பண்றேன் என்று “செந்தூரப்பாண்டி” என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் விஜய்க்கு பெரிய ஹிட்டாக அமைந்தது.
அதுமட்டுமல்லாமல் விஜயகாந்த் நிறைய உதவிகளை சத்தமில்லாமல் செய்து வந்தார். அவர் படங்களில் நாட்டுப்பற்று பற்றியும், நாட்டைப் பற்றியும், மக்கள் பற்றியும் வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். தமிழ் தமிழ் சினிமாவின் நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்தபோது பல உதவிகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி உள்ளார் விஜயகாந்த்.
என்னதான் விஜயகாந்த் பற்றி ட்ரோல் வீடியோ செய்தாலும் விஜயகாந்தின் மீது மக்களுக்கு இன்றும் அன்புக்கு குறைவில்லை. விஜயகாந்த் அரசியலில் இறங்கிய போது இவர் என்னடா செய்ய முடியும் என்று நினைத்தவர்களை சற்று ஆட வைத்தார் என்று சொல்லலாம்.
மக்களும் விஜயகாந்திற்கு பெரிய சப்போர்ட் செய்தார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு ஆளும் கட்சி தலைவியிடம் சட்டசபையில் சண்டை கூட்டத்துக்கு இதயம் வேறு யாருக்கும் வரவே வராது.
விஜயகாந்த் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் கந்த சஷ்டி கவசத்தை கையில் புத்தகமாக வைத்துக் கொண்டு அந்தப் பாடல் ஒலிக்க அதனைப் படித்துக் கொண்டு வருவது போல இருந்தது அந்த வீடியோ.