2006 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டு ஓரளவிற்கு வாக்குகளை பெற்றது. அதனையடுத்து 2011 ஆம் ஆண்டு திமுகவும் அதிமுகவும் விஜயகாந்தை போட்டி போட்டுக்கொண்டு கூட்டணி அமைக்க முயற்சி செய்தார்கள் ஆனால் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் மாபெரும் வெற்றியும் பெற்றது.
அப்பொழுது மாபெரும் கட்சியான திமுக பெரும் தோல்வியை சந்தித்தது. அந்த நேரத்தில் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று அதிமுகவையே சட்டசபையில் துணிச்சலாக கேள்வி கேட்டு வந்தார்.
இந்நிலையில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக தேமுதிக தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்தது. நேற்று அதிமுகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி முடித்தது அதனால் அடுத்த அழைப்பு நமக்கு தான் வரும் என்று தேமுதிக தயாராக இருந்தது ஆனால் சரியான அழைப்பு எதுவும் வராததால் நொந்துபோன தேமுதிக தொண்டர்கள் தனித்து போட்டியிடலாம் என்று தலைமையிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் தேமுதிக துணை பொதுச் செயலாளரும் மற்றும் விஜயகாந்த் அவர்களின் மைத்துனர் எல்கே சுதீஷ் ஒரு பேஸ்புக் பதிவு ஒன்றை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அதில் நமது முதல்வர் என்று விஜயகாந்த் புகைப்படத்தையும , நமது கொடி என்று தேமுதிக கொடியையும், நமது சின்னம் என்று முரசு சின்னத்தையும் குறிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த தொண்டர்கள் முதல்வர் கேப்டன் அவர்கள் எந்த கூட்டணியும் நம்பி கட்சி ஆரம்பிக்கவில்லை மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று பல மொழிகளை கூறி வருகின்றனர்.