பிரியங்கா தேஷ்பாண்டே விஜய் டிவியில் கலகலப்பான ஒரு தொகுப்பாளினி என்றால் கண்டிப்பாக அது பிரியங்காவை சொல்லலாம் காரணம் இவர் தொகுத்து வழங்கும் அத்தனை நிகழ்ச்சிகளிலும் குறும்புத்தனமான சேட்டைகள் செய்து ரசிகர்களை சிரிக்க வைப்பார்.
சுவாரசியமாக நிகழ்ச்சிகளை கொண்டு செல்லும் பல்ஸ் தெரிந்தவர் பிரியங்கா அதனால் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஜூனியர் சூப்பர் சிங்கர், காமெடி ராஜா, கலக்கல் ராணி என்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஒரு வெற்றி தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருந்தார்.
இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் பிரியங்கா தொடர்ந்து தொகுப்பாளினியாக பயணித்து வருகிறார். அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளர்களில் பிரியங்காவும் ஒருவர்.
பிரியங்கா விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்த பிரவீன் குமார் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் பிரியங்கா கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னர் ஆக வெளிவந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது பிரியங்காவிற்கு பதிலாக மைனா நந்தினி மாகாபா உடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதோடு பிரியங்கா எப்போது வருவார் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர். பிக்பாஸ் வீட்டை விட்டு வந்தவுடன் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரீ-என்ட்ரி கொடுத்தார் கடந்த இரண்டு வாரம் தொடர்ந்து பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
இந்நிலையில் பிரியங்கா சமீபத்தில் பிக்பாஸ் நண்பர்களுடன் இணைந்து ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கிருந்து பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். பிரியங்காவின் இந்த திடீர் பயணத்தால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குழுவினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை இந்த வாரம் மறுபடியும் மைனா நந்தினி தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி படப்பிடிப்பு நேரத்தில் பிரியங்கா ஹைதராபாத் சென்றது படக்குழுவினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வரும் வாரங்களில் பிரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆதலால் இந்த வாரம் மைனா நந்தினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். இனிமேல் தொடர்ந்து மைனா நந்தினி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய் டிவி குழுவிலிருந்து பிரியங்கா நீக்கப்படுகிறார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. வரும் வாரங்களில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்குவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.