நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரானோ தற்போது இந்தியாவிலும் அதன் கோர தாண்டவத்தை ஒரு மாதத்திற்கு மேலாக ஆடி வருகின்றது. இதனால் பல லட்சம் பேர் வேலையின்றி வீட்டுக்குள்ளேயே முடங்கி வருகின்றனர்.
குழுவிற்கு தடுப்பூசி ஏதும் கண்டுபிடிக்காத நிலையில் ஊரடங்கு முறையை நீட்டிப்பது ஒரே வழி என்று இந்திய அரசு ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே கொரானோ தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தை பெற்று வருகின்றது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் பலர் வறுமையில் வாடி வரும் நிலையில் திரையுலகில் மட்டும் சுமார் 600 கோடி அளவிற்கு முடங்கி உள்ளது. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெப்சி தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த பெப்சி தொழிலாளர்களுக்கு அரசும் பிரபலங்களும் தொடர்ந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். எனினும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகளிலும் சீரியல் படப்பிடிப்பு நிகழ்ச்சி படப்பிடிப்பு ஆகியவை எடுக்க முடியாமல் இருப்பதால் விளம்பரங்கள் தவிர்க்கப் பட்டு வருகின்றன.
இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியை தொலைக்காட்சிகளும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையிலும் விஜய் தொலைக்காட்சி வறுமையால் வாடும் பெப்சி தொழிலாளர்கள் 750 பேருக்கு ஒரு மாத வருமானத்தை தந்துள்ளது. அதாவது சுமார் 75 லட்சத்தை நன்கொடையாக கொடுத்துள்ளது இதுகுறித்து பெப்சி தொழிலாளர்கள் விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.