கர்ணன் தமிழ் திரையுலகில் மாஸ்டர் படத்திற்கு பிறகு எதிர்பார்த்த படம். மறுபடியும் தியேட்டருக்கு ரசிகர்கள் வரவேண்டுமென்றால் நல்ல படங்களை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார்கள் திரையுலகத்தினர். இந்நிலையில் போன வாரம் ரிலீசான சுல்தான் ஓகேவான படமாக அமைந்தது.
ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் தைரியமான கருத்தை வெளியில் சொல்லி பல விருதுகளை அள்ளிக் குவித்ததால் கர்ணன் படத்தை பெரிதாக எதிர்பார்த்தனர் ரசிகர்கள்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி நேற்று கர்ணன் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று முதல் நாளே 20 கோடி வசூலை செய்தாக தகவல்கள் வெளியானது. படத்தைப் பார்த்த அனைவரும் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதி என்று கர்ணன் படத்தை பார்த்துவிட்டு வெளியில் இருந்த மாரி செல்வராஜ் அவர்களை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு லவ் யூ நல்லா வருவ அற்புதமான படம் மனசார சொல்றேன் என்று மனதார பாராட்டி விட்டு சென்றார்.