விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் கூத்துப்பட்டறையில் இருந்து தொடங்கி கஷ்டப்பட்டு பல படங்களில் பின் நின்று இப்போது முன் வந்து உள்ள நடிகர். விஜய் சேதுபதியின் அசுரத்தனமான நடிப்பு அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.
நான் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி அதில் என்னுடைய நடிப்பை சிறப்பாக நடித்து காட்டுகிறேன் என்று சவாலாக எடுத்துக்கொண்டு நடித்து வருகிறார். அடுக்கடுக்கான படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் எப்போது தனது ரசிகர்களை சந்தித்தாலும் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தும் நல்ல மனிதர்.
பொன்ராம் எடுத்துக்கொண்டிருக்கும் படத்தில் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி சமீபத்தில் தன்னுடைய ரசிகர் ஒருவர் நேரில் வந்து பத்திரிக்கை வைத்து விட்டார் என்று அவரது திருமணத்திற்கு பிஸியான நேரத்திலும் போய் சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தி இருக்கிறார் மக்கள் செல்வம்.
விஜய் சேதுபதியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் சிறப்பாக கொண்டாடினார் பிரபலங்கள் அனைவரும் விஜய் சேதுபதியின் பிறந்த நாள் தினத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.
விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் பரிசாக அவரது ரசிகர்கள் ஒன்று சேர்ந்து ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து அசத்தியுள்ளனர் . எஸ்பி ஜெகநாதன் அவர்களுடைய சிலை ஒன்றை பரிசாக வழங்கினார்கள் ரசிகர்கள். ஆச்சு அசல் எஸ்எல் அப்படியே ஜெகநாதன் அவர்களை கண்முன் நிறுத்தியது போல இருந்தது அந்த சிலை.
எஸ்பி ஜெகநாதன் அவர்கள் விஜய் சேதுபதிக்கு நெருக்கமானவர். ஜெகநாதன் அவர்களின் லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் மாரடைப்பால் உயிரிழந்தார் தன்னுடைய நெருங்கிய நண்பரான ஜெகநாதன் அவர்களின் கடைசி படம் திரைக்கு வர வேண்டும் என்று கூறி முயற்சியோடு அதனை வெளிக்கொண்டு வந்து பங்கும் விஜய் சேதுபதிக்கும் உண்டு.
மனதுக்கு நெருக்கமான ஒருவரை பரிசாகக் கொடுத்து விஜய் சேதுபதி நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர் ரசிகர்கள்.