தளபதி விஜய் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் படையை கையில் வைத்திருக்கும் ஒரே ஹீரோ. விஜய் ஒரு விஷயத்தை செய்தால் அதை அப்படியே கடைபிடிப்பார்கள் அவரது ரசிகர்கள். ஒவ்வொரு விஜய் படமும் ரிலீஸ் ஆகும் போது விஜயை போல உடை அணிந்து கொண்டு இன்றும் முதல் நாள் முதல் ஷோவ்வில் பார்க்கும் ரசிகர்களும் உள்ளார்கள்.
சமீபத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு அவர்கள் விஜய்க்கு ஒரு கோரிக்கை விட்டு இருந்தார். செடி அல்லது மரம் ஒன்றை நட்டு அதனை புகைப்படமாக வெளியிட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
மகேஷ் பாபுவின் கோரிக்கையை ஏற்ற விஜய் தனது வீட்டில் ஒரு செடியை நட்டு அதனை புகைப்படமாக வெளியிட்டு இருந்தார். நேற்று சமூகவலைத்தளத்தில் அந்த புகைப்படங்கள் வெளியிட்ட சற்று நேரத்திலே லைக்ஸ் அள்ளியது.
நேற்று தளபதி விஜய் செய்த இந்த நற்செயலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று அவரது ரசிகர்கள் பல்வேறு இடங்களில் மரம் மற்றும் செடி நட்டு அதனை புகைப்படங்களாக இணையத்தில் வெளியிட்டு உள்ளனர்.
அதில் குறிப்பாக விஜயின் பெண் ரசிகைகளும் ” நல்லதை மட்டுமே கற்றுக் கொடுக்கும் எங்கள் தளபதி விஜய் அண்ணா. என் அண்ணன் வழியில் நாங்கள்” என்று மரகன்றினை நட்டு புகைப்படம் வெளியிட்டு உள்ளனர்.
இது போன்ற சமூக உணர்வுடன் விஜய் ரசிகர் மற்றும் ரசிகைகள் செய்யும் இந்த செயல்களுக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிகிறது.