நடிகர் விவேக் நம்மை விட்டு சென்றுவிட்டார் ஆனால் அவர் செய்த விழிப்புணர்வும் அவர் சொல்லிய வாக்கையும் இன்று பல ஊர்களில் பல இளைஞர்கள் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அவர் கூறியது ஒன்றே ஒன்று தான் மரம் நடுங்கள் அந்த மரம் தான் நல்ல காற்றை கொடுக்கும் வருங்கால சந்ததியினர் நன்றாக வாழ்வார்கள் என்று அடிக்கடி கூறுவார்.
விவேக் அவர்கள் இன்று இறந்த செய்தி தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள அவரது ரசிகர்கள் அனைவர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விவேக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வெளியூர்களில் இருந்து ஏகப்பட்ட இளைஞர்கள் கிளம்பினார்கள் ஆனால் கொரோனா காலகட்டம் என்பதினால் இன்றே உடலை எடுப்பதாலும் அவரைக் காண முடியாமல் போய் விடுமோ என்ற கவலையில் இருந்த இடத்திலேயே அவருக்கு மரியாதை செலுத்த ஆரம்பித்தார்கள்.
பல பள்ளி மாணவ மாணவியர்கள் மரம் நட்டு புகைப்படங்களை விவேக்கிற்கு சமர்ப்பித்தார்கள்.
இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் திருவாரூர் விளமல் பேருந்துநிலையத்தில் நடிகர் விவேக் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரக்கன்று நட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சி தளபதி ஆனந்த் மாவட்ட து.செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தினர் நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.