தளபதி விஜய் சைலண்டாக இளைஞர்கள் படையை கையில் வைத்திருப்பவர். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் அவரை அழைத்தாலும் நிதானமாக இருக்கும் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலமாக மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
தன் ரசிகர்களை சமூக சேவை செய்ய சொல்லும் விஜய் அத்துடன் மட்டும் நிறுத்தாமல் சமூக பிரச்சினைக்கும் குரல் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எப்படி ஒரு நேரத்தில் ரஜினிக்கு ரசிகர்களாக இருந்தார்களோ அப்படி தற்பொழுது விஜய்க்கு ரசிகர்களாக இருக்கிறார்கள்.
தமிழ் சினிமா துறையினரால் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் விஜய் படம் நடித்தோம் சம்பாதித்தோம் என்று இல்லாமல் தனது ரசிகர்களை சமூக சேவை செய்ய சொல்லி நல்வழியில் அழைத்துச் செல்கிறார்.
இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனையில் ரத்த பற்றாக்குறை ஏற்படப் போகிறது என்ற தகவல் கிடைத்ததும் விஜய் ரசிகர்கள் ஒன்றுகூடி அரசு மருத்துவமனை சென்று 40 பேர் ரத்ததானம் செய்துள்ளார்கள். ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன் மே 4ஆம் தேதியே அரசு மருத்துவமனைக்கு படையெடுத்த விஜய் ரசிகர்கள் தாமாகவே முன்வந்து ரத்த தானம் செய்துள்ளனர்.
ரத்ததானம் செய்ததற்காக சான்றிதழ் விஜய் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தளபதி ஆனந்த் ஏற்பாடு செய்திருந்தார் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து கலந்து கொண்டனர்.
மருத்துவமனையில் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே சமூக அக்கறையுடன் ரத்தம் கொடுத்த விஜய் ரசிகர்களுக்கு பாராட்டுகள் குவிகிறது.