ஒன்றிய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் விவசாயிகள், அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புகள் போராட்ட களத்தில் குதித்தனர். இந்நிலையில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்காக பிரதமர் மோடி நேற்று திடீரென அறிவித்தார். இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய பேச்சை எடுத்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.
அந்த வீடியோவுக்கு வறுத்தெடுக்கும் காரசார கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். வைரலான அண்ணாமலை பேச்சில் நம்முடைய அரசு என்ன சொல்கின்றது என்றால் 500 வருடம் பண்ணா கூட இந்த சட்டத்தில் ஒரு கமா கூட மாற்ற மாட்டோம். ஏனென்றால் இது காங்கிரஸ் ஆட்சி கிடையாது, இது பாஜகவின் ஆட்சி யாருக்கும் பயப்பட மாட்டோம். இது மக்களுக்கான கொண்டுவரப்பட்ட சட்டம் மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய சட்டம்.
என்னதான் நீங்கள் மிரட்டி உருட்டி சூட்டிங் எடுத்து பச்சை துண்டு போட்டா ஒரு கமா கூட சட்டத்தில் இருந்து மாறாது என்பதை தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமை. ஏற்கனவே சொன்னது நீங்கள் என்ன தலைகீழா நின்னு பில்லை கொண்டு வந்தாலும் கூட விவசாய சட்டம் மூன்றும் தமிழகத்தில் இருக்கும் என்று அண்ணாமலை பேசிய பேச்சு தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் மீம்ஸ்கள் வலம் வருகிறது.
ஒவ்வொரு மீம்ஸ் கிரியேட் வரும் ஒவ்வொரு கருத்தை அதில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு கமா கூட மாற்ற மாட்டோம் என்று சொன்னீர்களே; ஒரு வருடத்தில் விவசாயிகளின் போராட்டத்தால் கமா என்ன அந்த சட்டமே இல்லாமல் போய்விட்டதே என்று நக்கலடித்து வருகின்றனர். பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற செயல்களில் பாஜகவின் தலைவர்கள் பேசிய பேச்சு தான் இப்போது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி ஆகி வருகிறது.