Monday, May 20, 2024
-- Advertisement--

எங்கள் வீட்டு குலதெய்வத்தை இழந்துவிட்டோம் ..!!! உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்நாள் முழுதும் கடமைப்பட்டு இருக்கின்றேன்- வெங்கட்பிரபு உருக்கம்.

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களின் தாயாரும், பிரபல இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் அவர்களின் மனைவியும் நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் அதற்கு சமூக வலைதளம் மூலமாக அனைவரும் அஞ்சலி தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தற்பொழுது நன்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எனது தந்தை திரு கங்கைஅமரன் அவர்களும் எனது தம்பி பிரேம்ஜியும் நானும் என் குடும்பமும் எங்கள் குடும்பத்தின் குல தெய்வத்தை இழந்து நிற்கிறோம்.

முன்னொரு போதும் பார்த்திராத இப்படிப்பட்ட பேரிடர் காலத்தில் ஒரு பேர் இறப்பில் திக்கி திணறிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் எங்களை அரவணைத்து தேடி தேற்றி தோள்கொடுத்து நிற்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் எங்கள்மீது நீங்கள் அனைவரும் பிரதிபலன் இல்லா அன்பில் நெகிழ்ந்து போய் இருக்கிறோம் என்று கூறிய அவர் காவேரி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து சக தோழர்கள், நண்பர்கள், சக திரைப்பட மற்றும் ஊடக சகோதர சகோதரிகள், ரசிகர்கள் அனைவரது அஞ்சலிக்கும் பிரார்த்தனைகளும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்த கடினமான நேரத்தில் இமயம் போல நின்று வலுவூட்டி தேவைப்பட்ட அத்தனை உதவிகளையும் செய்து தந்த திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் வெங்கட்பிரபு.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles