இயக்குனர் ஆர்.கோபால் இயக்கத்தில் வெளிவர இருக்கும் அடங்காமை படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது. இந்த பிரஸ்மீட்டில் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டனர்.அதில் குறிப்பாக விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளம் குறித்து பெரிதளவு பேசியுள்ளனர். நடிகை வனிதா விஜயகுமார் அடங்காமை பிரஸ்மீட்டில் கலந்து கொண்டார்.
அதில் அவர் பேசும்போது பெரிய நடிகர்கள் மட்டுமே அதிக சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் தமிழ் சினிமா உலகம் எந்த அளவில் கஷ்டத்தில் இருக்கின்றது என்பதை பெரிய நடிகர்கள் கொஞ்சம் கூட கண்டுகொள்வதே இல்லை என காரசாரமாக வனிதா பேசியுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர்.கோபால் வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன்.புலேந்திரன் ஏ.என்.மைக்கல் ஜான்சன் தயாரித்து உள்ளார்.
இந்த படத்தில் அறிமுகமாக இலங்கையை சேர்ந்த சரோன் ஹீரோவாகவும், ஆந்திராவை சேர்ந்த ப்ரியா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். நடிகை வனிதா விஜயகுமார் பிரஸ்மீட்டில் கலந்துகொண்டு பேசியபோது பொதுவாக பிரஸ்மீட்டுக்கு வருவதே அரிதான ஒன்றாக மாறிவிட்டது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் நடிகர்களின் திருமணம் வரை சோசியல் மீடியா தெரியலையே முடிந்து விடுகின்றன என அனிதா விஜயகுமார் கூறியதைக் கேட்டு அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பெரிய நடிகர்கள் 100 கோடிக்கு மேல் சம்பளம் கேட்பது தமிழ் சினிமாவிற்கு வந்த சாபக்கேடு என பிரஸ்மீட்டில் கலந்துகொண்ட தயாரிப்பாளர்கள் மற்றும் சில இயக்குனர்கள் காட்டமாக பேசினர்.