விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் பிக்பாஸில் பங்கேற்ற போட்டியாளர்கள் கலந்துகொண்டு நடனமாடி வருகின்றனர். இந்த போட்டியில் நடுவராக நகுல் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருந்து வருகின்றனர். தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வனிதா வெளியேறுவதாக சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் தனக்கும் விஜய் டிவிக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை ஒரு சில தனி நபர்களால் மட்டுமே போட்டியிலிருந்து விலகியதாக கூறியுள்ளார்.
நடிகை வனிதா ஜாடைமாடையாக கூறுவது நடுவரான ரம்யா கிருஷ்ணன் என தகவல்கள் கசியத் தொடங்கி உள்ளது. அதைத்தொடர்ந்து BB ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளர்களிடம் கேட்டபோது ஆண் மட்டுமல்ல பொண்ணுக்கு பொண்ணும் எதிரியாக இருக்காங்க என ரம்யா கிருஷ்ணனையே சொல்றாங்கன்னு புரிஞ்சிக்கலாம். அதேபோல் சென்ற வாரம் நடைபெற்ற பெர்ஃபார்மென்ஸ்க்கு ரம்யா கிருஷ்ணன் கொடுத்த கமெண்ட்ஸ் வனிதாவை காயப்படுத்தி உள்ளதாக தெரிகிறது.
மேலும் ரம்யா கிருஷ்ணன் பாகுபாடின்றி அனைவருக்கும் ஒரு மிதமாகவே கமெண்ட்ஸ் கூறிவருகிறார்கள் எனவும் கூறுகின்றனர். ஆனால் ரம்யா கிருஷ்ணன் வனிதாவிற்கு பத்துக்கு ஒரு மதிப்பெண் கொடுத்ததாக குறிப்பிடுகிறார்கள். இதனாலேயே வனிதா கடுப்பாகி போட்டியில் இருந்து விலகியதாக கூறுகின்றனர். அதேசமயம் ரம்யா கிருஷ்ணன் கேட்டபொழுது அவங்க ஏதேதோ சொல்றாங்க BBஜோடிகளில் என்ன நடக்கிறது என்று அவர்களிடமே கேளுங்கள். இதெல்லாம் என்னை பொருத்தவரை ஒரு பிரச்சினையே கிடையாது. இதைப்பற்றி என்னிடம் கருத்துக் கேட்டால் நோ கமெண்ட்ஸ் என்ன சொல்லி முடித்துள்ளார்.
Thank you @vijaytelevision for giving me the best opportunities of my life beginning from #biggbosstamil3 ..#cookuwithkomali season 1..and #kalakkapovadhuyaaru season 9.. and #bbjodigal. I want to make it clear I WALKED OUT OF THE SHOW @bbsureshthatha sorry I had to do this..❤️🙏 pic.twitter.com/E0c95POaoD
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 2, 2021