சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது இதுவரை மத்திய அரசு என்று அழைத்துவிட்டு சமீபகாலமாக தமிழகத்தில் ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என்று அழைப்பதை பார்க்கிறோம். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்கிறார்கள். இப்படி சொல்வதால் மத்திய அரசில் புகழை மறைத்துவிட முடியாது.
19ம் நூற்றாண்டு பெண் கவிஞர் ஒருவர் எழுதிய ஆங்கிலக் கவிதையில் “ரோஸ் இஸ் ரோஸ்” என்ற வரி வரும் ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதனுடைய வாசனையை யாராலும் மாற்ற முடியாது. மத்திய அரசாங்கத்தை நீங்கள் எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி மத்திய அரசுக்கு இருக்கும் உரிமைகளை அதிகரிக்கவும் முடியாது குறைத்து கொள்ளவும், முடியாது.
நிதி அமைச்சர்: ரோஸ் ரோஸ் என்பது உண்மைதான். யாராவது சொல் வாங்களா ரோஜாப்பூ நாளைக்கு மல்லிகை ஆகிடும் என்று ரோஜா பூ என்றால் ரோஜா பூ தான், நான் கேட்கும் கேள்வி ஒன்றிய அரசாங்கத்தினுடைய வரி அதிகாரத்தை எதிர்த்தோ, குறை சொல்லி பேசுவதில்லை நாங்கள் முதல் ஆட்கள் இல்லை.
வானதி: ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு ஒவ்வொரு வருடமும் அதிக நிதியை தந்திருக்கிறது.
பி.டி.ஆர் ரொக்க தொகையை ஒப்பிட்டு பேசுவது சரியாகாது உற்பத்தியில் வரவு செலவு உள்ள சதவிகிதத்தை பேசுங்கள் என்றார்.