தளபதி விஜயின் திரைப்படங்கள் வெளியானால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கும் காரணம் படம் ஹிட் என்றால் வசூலை அள்ளிக் குவிக்கும் படம் சுமாராக இருந்தாலும் நல்ல வசூல் செய்யும் விஜய் படங்கள் மீது பெரிய அளவிற்கு நம்பிக்கை வைத்துள்ளார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.
அதனால் விஜய் முன்பை விட தற்பொழுது கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் மற்ற ஹீரோக்கள் கொரோனா காலகட்டத்தில் தனது படத்தை OTT தளத்திற்கு கொடுத்தாலும் விஜய் மட்டும் பிடிவாதமாக அரசு அனுமதி கொடுத்த பின் தனது படத்தை திரையரங்கில் தான் வெளியிட வேண்டும் என்று மாஸ்டர் படத்தை திரையரங்கில் வெளியிட்டார்.
கொரோனா காலகட்டத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் முதல் பணியாளர்கள் வரை நொந்துபோய் நின்ற காலத்தில் மாஸ்டர் வெளியாகி திரையுலகில் புத்துணர்ச்சி கொடுத்தது. மாஸ்டர் படத்திற்கு பிறகு தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் உடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார் விஜய்.
பீஸ்ட் திரைப்படத்தின் டப்பிங் பணிகளில் படு பிஸியாக இருக்கும் விஜய் இன்னும் சில நாட்களில் டப்பிங் முழுவதும் முடித்துவிட்டு ஓய்வெடுக்க வெளிநாடுகளுக்கு செல்வதாக தகவல்கள் ஒரு பக்கம் வர பீஸ்ட் படத்தின் ரிலீஸ் சம்மர் ஸ்பெஷலாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள் படக்குழுவினருக்கு நெருக்கமானவர்கள்.
இந்நிலையில் பொங்கலுக்கு விருந்தாக வர இருக்கும் அஜித்தின் வலிமை படத்தின் இயக்குனர் H வினோத் அவர்கள் தளபதி விஜய் அவர்களுடன் எப்போது பணியாற்றுவீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் நான் விஜய் சாரை மூன்று தடவை சந்தித்தேன் அதில் இரண்டு தடவை கதை சொல்லியிருக்கிறேன் நான் தான் சொதப்பி விட்டேன் இன்னொருவாட்டி நல்லா தயார் பண்ணிக் கொண்டு இன்னொரு சான்ஸ் கேட்பேன் என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் வினோத் சீக்கிரம் தளபதியுடன் ஒரு படம் பண்ணுங்க என்று கேட்டு வருகிறார்கள்.