Sunday, May 19, 2024
-- Advertisement--

கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேலு அவர்களின் உடல்நிலை பற்றி வெளிவந்த தகவல்..!!!

வைகைப்புயல் வடிவேலு கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா தொற்று ஏற்பட்ட தன் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

வடிவேலு அவர்கள் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுப்பதற்காக நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்துவருகிறார் இந்தப்படத்தை இயக்குனர் சுராஜ் அவர்கள் இயக்கி வருகிறார். வடிவேல் சுராஜ் காம்பினேஷனில் உருவான அனைத்து படங்களிலும் நகைச்சுவை நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கும் அதனால் வடிவேல் சுராஜை தேர்வு செய்து இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் சில காட்சிகளை லண்டனில் படம் எடுக்க முடிவு செய்த படக்குழுவினர் லண்டனில் சில நாட்கள் தங்கி சூட்டிங் எடுத்துள்ளனர்.

லண்டனில் இருந்து திரும்பிய நடிகர் வடிவேலு அவர்களுக்கு சற்று உடல்நிலை சரியில்லாததால் பிரபலம் தனியார் மருத்துவமனை ஒன்றில் கோவில் டெஸ்ட செய்துள்ளார் அதில் வடிவேலுக்கு கொரோனா உறுதி என்று வந்தபின் வடிவேலு அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வடிவேல் அவர்களுக்கு கொரோனா உள்ளதால் இயக்குனர் சுராஜ் அவர்களும் COVID டெஸ்ட் எடுத்து உள்ளார் அவருக்கும் கொரோனா உறுதி ஆனதால் இருவரும் ஒரே மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள்.

வடிவேல் மற்றும் சுராஜ் அவர்களுடன் யாரெல்லாம் இந்த நேரத்தில் உடன் இருந்தார்களோ அவர்களுக்கும் COVID டெஸ்ட் எடுத்து உள்ளார்கள் நெகடிவ் வந்த பின்னும் தன்னைத் தானே தனிமைப் படுத்தி வருகிறார்கள் இந்நிலையில் தற்பொழுது வடிவேலு அவர்களின் உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

வடிவேலு அவர்களின் உடல்நிலை முன்பை விட தற்பொழுது நன்றாக இருப்பதாகவும் இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் வடிவேல் டிஸ்சர்ஜ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles