நகைச்சுவை ஜாம்பவான் வைகை புயல் வடிவேல் தமிழ் சினிமாவிற்கு இவர் ஒரு பெரிய பொக்கிஷம் என்று சொல்லலாம். வடிவேல் அவர்களுடைய காமெடியை சிறு பிள்ளை முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்ப்பார்கள் அதுவும் அவர் செய்யும் நகைச்சுவை லூட்டிகள் இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. வடிவேல் அவர்களின் காமெடியை வைத்து இன்று வரை பல மிமீ கிரியேட்டர்கள் மீம்ஸ் செய்து வருகிறார்கள்.
தமிழ் மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்த நடிகர் வடிவேல் ஒரு நேரத்தில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் ஆனால் அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதால் என்னவோ வடிவேல் என்ற நகைச்சுவை மன்னனை தமிழ் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டினார். ஒரு சில மன கசப்பால் வடிவேல் அவர்களும் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
லாரன்ஸ் நடித்த சிவலிங்கா படத்தில் நடித்திருந்தார் வடிவேல் அதன்பின் தளபதி விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற மெர்சல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேல் நடித்திருந்தார். பழையபடி வடிவேல் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார் என்று குஷியில் இருந்தார்கள் ரசிகர்கள்.
மெர்சல் படம் மறுபடியும் வடிவேலுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க யோசித்த வடிவேல் சிம்புதேவன் இயக்கத்தில் இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் இரண்டாம் பாகம் நடிப்பதில் பிஸியாக இருந்தார். என்ன காரணமோ அந்தப்படமும் பாதியில் நின்றது.
வடிவேல் அவர்கள் இல்லாமல் தற்பொழுது வெளியாகும் படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் நகைச்சுவை நடிகர்கள் ஒரு சிலர் செய்யும் நகைச்சுவையை பார்த்து ரசிகர்களே டென்சன் ஆகும் அளவிற்கு இருக்கிறது .
பலரை வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலு அவர்கள் தமிழ் சினிமாவில் தலை காட்டாதது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது.
சமீபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வைகைப்புயல் வடிவேல் தனது சக நடிகர்கள் மற்றும் சினிமா அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படத்தில் மெலிந்து காணப்பட்டார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலுவை பார்த்த திரையுலக நண்பர்கள் சந்தோசத்தில் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தற்பொழுது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.