இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். தனுஷ் நடித்த வாத்தி படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.
பல தியேட்டர்களில் பட்டாசு வெடித்து, பேனர் ஒட்டி தனுஷின் படத்தை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். வாத்தி படம் கலவையான விமர்சனகளையே பெற்று உள்ளது. முதல் பாதி சற்று போராக உள்ளதாகவும் இரண்டாவது பாதி நன்கு உள்ளதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தெலுங்கு இயக்குனர் ஆன வெங்கி ஆட்லூரி தமிழில் முதல் படத்திலேயே நல்லதொரு பெயரை பெற்றுள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. கல்வியை வைத்து வியாபாரம் செய்யும் சமுத்திரகனியை வாத்தியாரான தனுஷ் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
1990ல் நடக்கும் இந்த கதை அரசு பள்ளிகளை மூட முயற்சிக்கும் சமுத்திரக்கனியின் கனவுக்கு அரசு ஆப்பு வைக்க அந்த பள்ளிகளை தத்தெடுத்து நடத்துவது போல இரண்டாம் தர, மூன்றாம் தர ஆசிரியர்களை அனுப்பி கல்வியை கெடுக்க நினைக்கிறார் சமுத்திரக்கனி.
அப்படி ஒரு இரண்டாம் தர ஆசிரியராக உள்ளே நுழைகிறார் தனுஷ். ஆனால் அவர் எவ்வாறு பள்ளியில் மாற்றத்தை கொண்டு வருகிறார் என்பது பற்றி விவரிக்கிறது வாத்தி கதை.
முதல் பாதி சற்று இழுவையாகும், இரண்டாம் பாதியில் நல்ல விறுவிறுப்பு கதையில் உள்ளது எனவும் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றன. வாத்தி படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் இனிமையாக உள்ளது. ஜிவி பிரகாஷின் இசை வாத்தி படத்தை முழுவதுமாக தாங்கி பிடித்து உள்ளது.
தனுஷின் வாத்தி படத்தில் மீனாட்சி டீச்சர் என்ற ரோலில் நடித்துள்ள சம்யுக்தாவின் நடிப்பு கவர்ந்துள்ளது. பிரேமம் மலர் டீச்சருக்கு பிறகு இவருக்கு நல்லதொரு பெயர் கிடைக்கும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.