உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக நின்று அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தேர்தல் முடிவுகள் வந்த நாட்களில் இருந்து இன்று வரை ஓயாமல் தொகுதிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
வாரத்திற்கு ஒரு முறையாவது தொகுதிக்குச் சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வையும் கொடுத்து வருகிறார். அங்கு உள்ள மக்களிடம் உதயநிதியை பற்றி கேட்டால் அவர் எங்க வீட்டுப் பிள்ளை எங்களுடைய அண்ணன் என்று கொண்டாடி வருகிறார்கள் அந்த அளவிற்கு உதயநிதி ஸ்டாலின் தொகுதி மக்களுக்காக உழைத்து வருகிறார்.
அவர் சொன்னதை தாண்டி நிறைய செய்து கொண்டிருக்கிறார். எங்களுடைய உடல்நலத்தில் அக்கறையாக உள்ளார் அனைவரையும் தடுப்பூசி போட சொல்லி அறிவுறுத்துகிறார். எந்த புகாராக இருந்தாலும் எந்த குறையாக இருந்தாலும் என்னிடம் கூறுங்கள் என்று உரிமையோடு பேசுகிறார் என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் மக்கள்.
சேப்பாக்கம் தொகுதி மக்களை பார்த்து பிற தொகுதி மக்கள் பொறாமைப்படும் அளவிற்கு வேலை செய்து வரும் உதயநிதி திமு கழகத்தின் இளைஞரணி செயலாளராக கடமையாற்றி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததை ஒட்டி தனது தாத்தா முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செய்துள்ளார். கலைஞர் வழியில் தலைவர் வழிகாட்டலில் அயராது உழைப்போம் என்று கூறியுள்ளார்.
வாழ்த்துக்கள் உதயநிதி உங்களுடைய சேவை என்றும் மக்களுக்கு தேவை.