Friday, April 26, 2024
-- Advertisement--

“நீங்க யாரு ..? உங்க பேர் என்ன ..?” “உங்களுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம் ..” கேள்வி கேட்ட மாணவி…!!! அதிர்ந்த உதயநிதி.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமீப காலமாக தொடர்ந்து கட்சி கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். என்னதான் படங்களில் நடித்து வந்தாலும் இன்று வரை வாரத்திற்கு ஒரு தடவையாவது தன்னுடைய தொகுதிக்கு சென்று பார்வையிட்டு வருகிறார்.

அந்த தொகுதிக்கு உழைத்த உழைப்பு இன்னும் அந்த பகுதி மக்களை கேட்டால் உதயநிதியை கொண்டாடுவார்கள். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட உதயநிதி தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியைப் பற்றி பேசினார் அப்போது மாணவர்கள் எப்படி தெளிவா இருக்காங்க என்று உதாரணத்திற்காக சொல்கிறேன்.

நான் மேடையில் உட்கார்ந்து இருந்தேன் அப்போ என் பக்கத்துல ரெண்டு சின்ன பொண்ணுங்க மாணவிங்க உட்கார்ந்து இருந்தாங்க அவங்க கிட்ட உன் பெயர் என்ன மா என்று கேட்டேன் அதுக்கு அவங்க கிறிஸ்டினா என்று சொன்னாங்க மற்றொரு பெண் கிட்ட கேட்டேன் ஜாஸ்மின் அப்படின்னு சொன்னாங்க அதுக்கு அப்புறம் நீங்க யாரு உங்க பெயர் என்ன என்று கேட்டாங்க நான் உதயநிதி என்று கூறினேன்.

உங்களுக்கும் கலைஞருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டாங்க நான் அவரோட பேரன் என்று கூறினேன் அந்த அளவிற்கு தெளிவாக இருக்கிறார்கள் மாணவ-மாணவிகள்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கல்வி தரமாக வேண்டும். கல்வியறிவை கொண்டு சேர்க்க வேண்டும் இந்தியாவிலேயே ஒரு கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் வர வேண்டும் என்பதே எண்ணமாய் வைத்து கொண்டு உழைத்து வருகிறார்.

அன்பில் மகேஷ் எப்படி ஒரு கல்வித்துறை அமைச்சர் நடக்க வேண்டும் என்பதற்கான உதாரணமாக இருக்கிறார் என்று கூறினார் உதயநிதி.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles